“தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி எல்லைமீறி செயல்படுதாக சொல்லப்படும் குற்றசாட்டுகள் குறித்து உங்கள் கருத்தென்ன?”
“தி.மு.க ஆட்சியில் சீர்கெட்டு போயுள்ள சட்டம் ஒழுங்கு குறித்தும், சீரழிந்துபோன நிர்வாக முறை குறித்தும் பேச ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அதேசமயம், இங்குள்ள சித்தாந்தங்களை அரசியல் ரீதியாக ஆளுநர் விமர்சித்துப் பேசுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது. அதனை அவர் குறைத்துக்கொள்ள வேண்டும்!”


“ஆளுநர் ஆர்.என் ரவியை இயக்குவதே பா.ஜ.க-தான் என்ற தி.மு.கவின் நீண்ட கால குற்றசாட்டில் அ.தி.மு.க-வுக்கு ஏற்புள்ளதா?”
“காங்கிரஸ், பா.ஜ.க என மத்தியில் யார் ஆட்சியிலிருந்தாலும் தனக்குத் தேவையான ஆட்களைத்தான் ஆளுநர்களாக நியமிப்பார்கள். அப்படி நியமிக்கப்பட்டவர்களும் மத்திய அரசின் விருப்பத்தின்படியே செயல்படுவது, மாநில அரசுக்கு இடையூறு செய்வது என்பதெல்லாம் வழக்கமானதுதான். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒருபடி மேலே சென்று சித்தாந்தங்களை விமர்சித்து பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்!”
நன்றி
Publisher: www.vikatan.com