மத்திய அரசு கேஸ் சிலிண்டர்களுக்கு 100 ரூபாய் மானியம் உயர்த்திய நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தது எப்பொழுது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில், பொருளாதாரத்தில் பிந்தங்கிய பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் கடந்த மாதம் ரூ.200 அதிகரிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேலும் ரூ.100 மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டத்தில் விநியோகிக்கப்படும் சிலிண்டரில் விலையில் ரூ.300 குறைத்து வழங்கப்படும்.
உஜ்வாலா திட்டத்தில் 14.2கிலோ சிலிண்டரின் தற்போதைய விலை ரூ.703 ஆக உள்ளது. மானிய விலையில் ரூ.100 உயர்த்திய நிலையில், இனி ரூ.603 வழங்கப்படும். பொது சந்தையில் சிலிண்டரின் விலை ரூ.903 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட காரணத்தினால் 2023 -24 நிதியாண்டில் 7,680 கோடி கூடுதல் நிதி தாக்கம் ஏற்படக்கூடும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தொடர்ந்து சிலிண்டர்களுக்கான சலுகையை அறிவித்து வரும் நிலையில், 2021 தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது திமுக கேஸ் சிலிண்டர்களுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று 503வது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. இந்த தேர்தல் வாக்குறுதி எப்பொழுது திமுக அரசு செயல்படுத்தும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com