டாஸ்மாக் மூலமாக அரசுக்கு வரக்கூடிய வருமானம் 25 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சம்பாதிக்கக்கூடிய பணத்தை பெரும்பாலும் டாஸ்மாக்கில் செலவழிக்கின்றனர். குடிகார சமுதாயமாக தமிழகத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். இதே தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம் என கபட நடகம் ஆடிவிட்டு, தற்போது பெண்களின் அழுகைக் குரலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.


தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை தருவோம் என்று கூறினார்கள். தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை மட்டுமே 2 கோடி 25 லட்சம். முதலில் 75 லட்சம் பேருக்கு மட்டும் என்றார்கள், பா.ஜ.க வலியுறுத்ததால் 1 கோடி பேருக்கு வழங்குவோம் என்றார்கள். மகளிர் உரிமைத்தொகை என்பது பெண்கள் எல்லோருக்குமான உரிமை. அதை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.
தி.மு.க-வைப் பொறுத்தவரை மூன்றே மூன்று கொள்கைகள்தான். `சாராயத்தை விற்போம், சனாதனத்தை வேரறுப்போம், தேர்தலுக்கு முன்பு பல்டி அடிப்போம்’ இவைதான் அவை. தி.மு.க நிலக்கோட்டை தொகுதிக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை. தேர்தல் வருகின்றது என்ற ஒரே காரணத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மறுபடியும் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகப் பொய் கூறுகிறார்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com