இதில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகளும், தொண்டர்களும் வந்திருக்கிறார்கள். பொதுக்குழுவில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு பெயர், ஊர், உள்ளிட்ட விவரங்களுடன் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டது. இன்றைய தினம் வளர் பிறை என்பதால் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு தேமுதிக இளைஞரணிச் செயலாளர் பதவி தருவது குறித்தும் பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பொறுப்பு வழங்குவது பற்றியும் பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, முன்னர் சொன்னது போலவே விஜயகாந்த் இன்றைய கூட்டத்துக்கு வருகை தந்தார், அவரை கண்டதும் தொண்டர்கள் உற்சாகத்தில் ஆராவாரம் செய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com