பொதுவாக மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது போனஸ் வழங்குவது வழக்கம். அதேபோல் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் மட்டுமல்லாமல் வருடத்திற்கு இருமுறை அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வருகிற நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர இருப்பதால் மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸ் எப்பொழுது வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து மத்திய அரசு தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Also Read : இந்த ஆயுத பூஜைக்கு நீங்களும் சொந்த ஊர் போறீங்களா..? இனிமே ரொம்ப கஷ்டம் பாத்துகோங்க…
அதன்படி, மத்திய அரசு ஊழியர்களில் சி பிரிவு மற்றும் கெசட் ரேங்க் இல்லாத பி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதலை வழங்கி உள்ளது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களில் அவர்களின் தகுதிக்கேற்ப அதிகபட்சம் ரூ.7 ஆயிரம் வரையிலும் தீபாவளி போனஸ் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு துறைகளின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கும் எவ்வளவு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்கிற பட்டியலையும் மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நன்றி
Publisher: jobstamil.in