இராம ஸ்ரீநிவாசன், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க
‘‘முதல்வர், பயத்தில் ஏதேதோ உளறுகிறார். முதல்வர் தொடங்கி பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையிலுள்ள அனைவருமே ஒரேபோல ஐ.டி., இ.டி சோதனை நடைபெற்றால், ‘பழிவாங்கும் நடவடிக்கை’ என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும்போதே இன்றைய முதல்வர் ஸ்டாலின் மீது சி.பி.ஐ ரெய்டு நடந்ததே… அதற்குப் பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக இடங்களை ஒதுக்கியது தி.மு.க. அப்படியென்றால் ரெய்டு மூலம் காங்கிரஸ், தி.மு.க-வை மிரட்டியது என்று எடுத்துக்கொள்ளலாமா… பா.ஜ.க., ஒருபோதும் அரசு அமைப்புகளைத் தவறாக வழிநடத்தாது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் தி.மு.க-வினர் அதிக அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள். அதன் விளைவாகவே சோதனைகள் நடைபெறுகின்றன. தவறு எதுவும் செய்யவில்லை என்றால் பயமும் பதற்றமும் எதற்கு… உண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு தி.மு.க-தான் பழிவாங்கும் நடவடிக்கையைச் செய்துகொண்டிருக்கிறது. நாங்கள் அ.தி.மு.க-வை மிரட்டியிருந்தால், அவர்கள் எப்படி எங்கள் கூட்டணியைவிட்டு வெளியே செல்வார்கள்?’’
நன்றி
Publisher: www.vikatan.com