`பா.ஜ.க தன் சாதனைகளைப் பேசாமல் சாதி, மதம் குறித்துப்

செல்வப்பெருந்தகை, கரு.நாகராஜன்செல்வப்பெருந்தகை, கரு.நாகராஜன்

செல்வப்பெருந்தகை, கரு.நாகராஜன்

கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இந்தியாவில் சாதி, மதங்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. தற்போதுகூட, சாதிவாரி கணக்கெடுப்பு, ஓ.பி.சி போன்று பல சாதி, மத விவகாரங்களை மையாக வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். இதில், அவர்கள் எங்களைக் குற்றம் சொல்வதுதான் கேலிக்கூத்து. பா.ஜ.க அரசு அமைந்ததிலிருந்தே ஏழை, எளிய மக்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி அரசு கொண்டுவந்திருக்கிறது. அதில், அனைவருக்கும் கழிவறை தொடங்கி, அனைவருக்கும் வீடு வரை பல்வேறு திட்டங்கள் அடங்கும். சாதி, மதம் குறித்துப் பேசி குறுக்குவழியில் ஆட்சிக்கு வர நினைக்கும் காங்கிரஸின் கற்பனைக் குற்றச்சாட்டை நம்ப யாரும் தயாராக இல்லை. கொரோனா பேரிடரில் நிலையான பொருளாதாரத்தால் நமது நாடு உலக அரங்கில் முன்னோக்கிச் செல்கிறது. ஐந்து ட்ரில்லியன் இலக்குவைத்து, அதில் நான்கு ட்ரில்லியனை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். தோல்வி பயத்தில் இப்போதிலிருந்தே காங்கிரஸ் கட்சியினர் உளறிக்கொண்டி ருக்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாபெரும் வெற்றியைப் பெறும் பா.ஜ.க.”

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *