“ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும், மனம் தளரவில்லை” என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். முன்னதாக, 2019-ல் மத்திய பா.ஜ.க அரசு ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிமன்ற அமர்வு, கடந்த ஆகஸ்ட்டில் விசாரிக்கத் தொடங்கியது.


இதில், மனுதாரர்கள் மற்றும் மத்திய அரசின் வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, தீர்ப்பை ஒத்திவைப்பதாக செப்டம்பர் 5-ம் தேதியன்று தெரிவித்தது. இந்த நிலையில், “ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும். 2024 செப்டம்பருக்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும்” என்று உச்ச உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
நன்றி
Publisher: www.vikatan.com