பக்தர்களே தயாராகுங்கள்! ஐயப்பன் கோயில் நடை திறப்பு! எப்போது தெரியுமா? உடனே பாருங்கள்…!

பக்தர்களே தயாராகுங்கள்! ஐயப்பன் கோயில் நடை திறப்பு! எப்போது தெரியுமா? உடனே பாருங்கள்...!
பக்தர்களே தயாராகுங்கள்! ஐயப்பன் கோயில் நடை திறப்பு! எப்போது தெரியுமா? உடனே பாருங்கள்…!

கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்து உள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதோடு கார்த்திகை மாதத்தில் மட்டும் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். மேலும் மார்கழி மாதத்திலும், தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அதை தொடர்ந்து பங்குனி மாத ஆராட்டு விழாவும் சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும்.

இப்படிப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் மற்ற கோவிலை போல் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் அந்தந்த பூஜைக்காக மட்டுமே நடை திறக்கப்படும். மேலும் நடை திறக்கும் போது மட்டும் பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வர். மகர ஜோதி, கார்த்திகை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையின் போது கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது இந்த மாதம் 16 ஆம் தேதி கோவில் நடை மண்டல பூஜைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என்றும், அதோடு 17 ஆம் தேதி காலையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மேலும் 17 தேதி முதல் டிசம்பர் 27 ஆம் தேதி வரை அதாவது 41 நாட்கள் மண்டல பூஜைக்காக நடை திறந்திருக்கும் என்றும், டிசம்பர் 27 ஆம் தேதி மாலை நடை அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெற உள்ள நிலையில் மாதம் 30 ஆம் தேதி மாலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். ஜனவரி 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் செய்யப்படும். அதை தொடர்ந்து ஜனவரி 19 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20 ஆம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும். அதோடு நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவு பெறும். அதன் பின்னர் வழக்கம் போல் மாதம் ஒரு முறை பூஜைக்காக நடை திறக்கப்படும். அடுத்து நவம்பர் மாதம் 15 ஆம் தேதி மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்படும்.

Also Read >> 90s கிட்ஸ்களை காதலால் உருகவைத்த நாயகி.. இன்று தபுவின் பிறந்தநாள்…!

மேலும் இந்த பூஜைகளில் கலந்து கொண்டு ஐயப்பனை நேரில் கண்டு தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். அத்தோடு ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து பக்தர்கள் எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Previous article90s கிட்ஸ்களை காதலால் உருகவைத்த நாயகி.. இன்று தபுவின் பிறந்தநாள்…!

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *