டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களாகிய தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்தனர்.
இதனை அடுத்து மேட்டூர் அணையிலிருந்து போதிய நீர் வரத்து இல்லாததால் பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் பெரும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதை தொடர்ந்து விவசாயிகளிடம் பேசிய போது குறுவை மற்றும் சம்பா பயிருக்கு இன்னும் ஒரு மாதத்துக்கு தண்ணீர் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளனர். மேலும் 5 நாள்களுக்கு ஒரு முறை என்ற விகிதத்தில் பாய்ச்சினால் ஒரு மாதத்தில் மட்டுமே 6 முறை நீர் பாய்ச்ச வேண்டி உள்ளது என்றும் கூறியுள்ளனர். ஆனால் 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை பாய்ச்ச முடியாத காரணத்தால் குறுவை மற்றும் சம்பா பயிர்கள் கருகி உள்ளது.
Also Read >> ஒன்றிய அரசின் அதிரடி அறிவிப்பு! 100 நாள் வேலை திட்டம் இல்லையா? முழு விவரங்கள் இதோ….
இதனை கருத்தில் கொண்டு குறுவை மற்றும் சம்பா சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இன்றைய நிலவரப்படி நிலத்தை ஆய்வு செய்து அதற்கேற்ப நலத்திட்ட உதவிகளை செய்து தர வேண்டும் என்றும், குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்றும் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி
Publisher: jobstamil.in