போதையில் இருக்கும் பெண்ணின் உடலைப் பயன்படுத்த ஆணுக்கு எந்த


`பெண் மறுத்த பிறகும், அவரை முத்தமிட முயல்வது குற்றம். போதையில் இருக்கும் பெண்ணின் நிலை, அவரது உடல்நிலையைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையை ஆண் நண்பருக்கு வழங்கவில்லை’ என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சந்தீப் குப்தா என்பவர் மீது, போதையில் இருந்ததாகக் கூறப்படும் பெண்ணை அவரது அனுமதியின்றி, மறுப்பு தெரிவித்த பிறகும் முத்தமிட முயன்ற குற்றத்திற்காக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், 2019 பிப்ரவரி 5 அன்று தீர்ப்பளித்த டெல்லி மகிளா நீதிமன்றம், இந்திய தண்டனை சட்டம் 354, 323 ஒரு பெண்ணின் அடக்கத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் பெண்ணை தாக்குதல் மற்றும் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் `குற்றவாளி’ என்று அறிவித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் குப்தா, டெல்லி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவைக் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுனில் குப்தா விசாரித்தார். 

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *