
2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா விருதுகள் நேற்று நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில், அட்லீ இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியான “ஜவான்” படத்தில் நடித்த ஷாருக்கான் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து ஜவான் படத்தில் ஷாருக்கான ஜோடியாக நடித்த நடிகை நயன்தாரா அவர்களுக்கு சிறந்த நடிக்கைக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அட்லியின் ஜவான் படம் திரைக்கு வந்து சுமார் 1000 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவை இயக்கி வந்த இயக்குனர் அட்லீ முதன்முறையாக பாலிவுட் படத்தை இயக்கி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, ரித்தி தோக்ரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடங்களிலும் நடிகை நயன்தார காவலராகவும் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர்.
Also Read > டைரக்ட்டா இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க – சென்னையில 75 பணியிடங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது
இந்நிலையில், தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாராவுக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிகைக்கான விருதை ஷாருக்கான் வழங்கினார். மேலும், சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற நடிகர் ஷாருக்கான் மேடையில் பேசும்போது, நான் சிறந்த நடிகர் விருதுக்கு தகுதியானவன் என என்னை கருதியதற்காக நடுவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். விருதுகளை விரும்புபவன் நான். அதன்மேல் எனக்கு சிறிதளவு பேராசையும் உண்டு என்று கூறினார். விழாவில், ஜவான் படக்குழுவினர் அனைவருக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் அவர் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in