IND vs AUS: ஆஸ்திரேலியாவை மிரள வைத்தாலும் இந்திய அணி செய்த தவறுகள் என்ன?

IND vs AUS: ஆஸ்திரேலியாவை மிரள வைத்தாலும் இந்திய அணி செய்த தவறுகள் என்ன?

ஒருநாள் தொடரை வென்றது இந்தியா: தேர்வாளர்களை குழப்பிய அஸ்வின், சூர்யா, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆட்டநாயகன் விருது ஸ்ரேயாஸ் அய்யருக்கு வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.

இந்தூரில் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் சேர்த்தது. ஆட்டத்தின் இடையே மழை குறிக்கிட்டதால், இலக்கு மாற்றப்பட்டு, 33 ஓவர்களில் 337 ரன்களாக ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படது.

ஆனால், 28.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 217 ரன்களில் சுருண்டு 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தியாவின் உத்தி

சேஸிங்கில் 400 ரன்கள் இலக்கு என்றால் எந்த அணிக்குமே மலைப்பாகத்தான் தெரியும், பேட்டர்களும் மனரீதியாக உற்சாகம் இழந்துவிடுவார்கள்.

எதிரணியை மனரீதியாக வலுவிழக்கச் செய்யும் தந்திரங்களில் ஒன்று, முதலில் பேட் செய்யும் அணி பெரிய இலக்கை நிர்ணயிப்பது.

அதை இந்திய அணி சரியாகச் செய்ததது. இந்த தந்திரமான உத்தியை உலகக்கோப்பையின் பல போட்டிகளில் நாம் காண நேரலாம்.

வெற்றி நாயகர்கள்

ஒருநாள் தொடரை வென்றது இந்தியா: தேர்வாளர்களை குழப்பிய அஸ்வின், சூர்யா, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சுப்மான் கில்லும் அசுர ஃபார்மில் இருந்ததால் அவரும் ஸ்ரேயாஸ் அய்யரும் சேர்ந்து 29 பந்துகளில் அரைசதம் அடித்தனர்.

இந்திய அணியின் வெற்றிக்கு சுப்மான் கில்(104), ஸ்ரேயாஸ் அய்யர்(105) ஆகியோரின் அற்புதமான சதமும், பிரம்மாண்ட கூட்டணியும், கே.எல்.ராகுலின் அரைசதம், 360 டிகிரி வீரர் சூர்யகுமார் யாதவின் 32 பந்துகளில் 72 ரன்கள் அதிரடி ஆட்டம் ஆகியவை முக்கியக் காரணமாக அமைந்து, இமாலய ஸ்கோரை எட்ட உதவின.

ஆட்டநாயகன் விருது ஸ்ரேயாஸ் அய்யருக்கு வழங்கப்பட்டது. பந்துவீச்சில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும், பும்ராவுக்கு பதிலாகச் சேர்க்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

‘சின்னப் பசங்க’ விளையாடுற பவுண்டரியா?

பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியான இந்த ஆடுகளத்தில் மட்டும் இந்திய அணி, 31 பவுண்டரிகளையும், 18 சிக்ஸர்களையும் விளாசியது. ஆனால், ஆடுகளத்தில் பவுண்டரி அதிகபட்சமாக 69 மீட்டர் நீளமும், தேர்டுமேன் பவுண்டரி 54 மீட்டர் நீளமும் எனக் குறுகியதாக இருந்தது.

இதனால்தான் இந்திய பேட்டர்கள் பேட்டில் பந்து பட்டவுடன் பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தது.

ஐசிசி விதிப்படி பவுண்டரி அளவு ஆடுகளத்தின் நடுப்பகுதியில் இருந்து 82.29 மீட்டருக்கு அதிகம் இல்லாமலும், 59.43 மீட்டருக்கு குறைவில்லாமலும் இருக்க வேண்டும்.

ஆனால், இந்தூர் ஹோல்கர் ஆடுகளம் சிறியதாக இருந்தது சமூக ஊடகத்தில் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஸ்ரேயாஸ்-கில் கூட்டணி

கடந்த ஆட்டத்தில் கில்லுடன் கூட்டணி சேர்ந்தபோது சரியான புரிதல் இல்லாமல் 3 ரன்னில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்.

ஆனால் இந்த ஆட்டத்தில் இருவரும் சேர்ந்து, 164 பந்துகளில் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த காலண்டர் ஆண்டில் ஸ்ரேயாஸ் அடிக்கும் 5வது ஒருநாள் சதம் இது.

தேர்வாளர்களுக்கு குழப்பம்

ஒருநாள் தொடரை வென்றது இந்தியா: தேர்வாளர்களை குழப்பிய அஸ்வின், சூர்யா, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

உலகக்கோப்பை போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட சிறந்த அணியை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தாலும், ப்ளேயிங் லெவனை தேர்வு செய்வதில் நிச்சயமாகப் பெரும் குழப்பம் நேரலாம்.

ரவிச்சந்திர அஸ்வின் 7 ஓவர்கள் வீசி 41 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் முக்கியப் பங்களித்தார். சூர்யகுமார் யாதவின் அதிரடியான ஆட்டமும் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு பெரும் பங்கு வகித்தது.

இந்த மூவரின் ஆட்டம் பிசிசிஐ தேர்வுக் குழுவுக்குப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் 4வது , 5-வது இடத்தில் யாரை களமிறக்குவது என்ற குழப்பமும், அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்காதது சரியான முடிவா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

அஸ்வினின் பந்துவீச்சு நேற்று ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாக இருந்தது. அதிலும் வரும் உலகக்கோப்பையில் அஸ்வின் தேர்வானால், இடதுகை பேட்டர்களுக்கு அஸ்வின் பந்துவீச்சு பெரிய தொந்தரவாக மாறலாம்.

உலகக்கோப்பை போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட சிறந்த அணியை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தாலும், ப்ளேயிங் லெவனை தேர்வு செய்வதில் நிச்சயமாகப் பெரும் குழப்பம் நேரலாம்.

ஏனென்றால், 4வது, 5வது இடத்துக்கு ஸ்ரேயாஸ், கேஎல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் என 4 வீரர்களிடையே கடும் போட்டி இருப்பதால், வீரர்களை மனநிறைவு செய்து தேர்வு செய்வது சிரமம்தான்.

வலுவான தொடக்கம்

கடந்த ஆட்டத்தில் 3 ரன்னில் ஆட்டமிழந்த ஸ்ரேயாஸ் இந்த ஆட்டத்தில் தான் சந்தித்த முதல் 14 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடித்து வலுவாகத் தொடங்கினார்.

சுப்மான் கில்லும் அசுர ஃபார்மில் இருந்ததால் இருவரும் சேர்ந்து 29 பந்துகளில் அரைசதம் அடித்தனர். இதனால் 10 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்களை எட்டியது.

ஸ்ரேயாஸ் 37 பந்துகளிலும், கில் 41 பந்துகளிலும் அரைசதம் அடித்து ரன்ரேட்டை மின்னல் வேகத்துக்கு உயர்த்தினர். பவுண்டரி எல்லை சிறியதாக இருந்ததால், 11 முதல் 20 ஓவர்கள் வரை ஓவருக்கு 7.8 ரன்கள் சென்றது. இந்திய பேட்டர்களின் ரன்வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

ஒருநாள் தொடரை வென்றது இந்தியா: தேர்வாளர்களை குழப்பிய அஸ்வின், சூர்யா, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதால் ஆஸ்திரேலிய அணி மிகப் பெரிய விலை கொடுக்க நேர்ந்தது.

பவுண்டரி, சிக்ஸரில் இவ்வளவு ரன்னா

இந்திய அணி இமாலய ஸ்கோரை எட்டுவதற்கு ஆடுகளத்தில் பவுண்டரி அளவு சிறியாக இருந்ததும் ஒரு காரணம். 31 பவுண்டரி, 18 சிக்ஸர்களில் மட்டுமே 232 ரன்களை இந்திய அணி சேர்த்தது ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதால் ஆஸ்திரேலிய அணி மிகப் பெரிய விலை கொடுக்க நேர்ந்தது. ஸ்ரேயாஸ் சதம் அடித்தபின், அளித்த 2வது வாய்ப்பில் அபாட் கேட்ச் பிடித்ததால் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்.

நான்காவது, 5வது வரிசையில் களமிறங்கிய ராகுல், கிஷன் இருவரும் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசியதால் 33 பந்துகளில் 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

இஷான் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 43 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்திருந்ததால், 400 ரன்களை எட்டும் என்று நினைக்கவில்லை.

தொடர்ந்து 6,6,6,6…

ஆனால், சூர்யகுமார் களத்துக்கு வந்த பின்புதான் ஆட்டத்தின் போக்கு மாறியது. கேமரூன் க்ரீன் வீசிய 44வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்கள் விளாசி சூர்யகுமார் அணியின் ரன்ரேட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார்.

சீன் அபாட் வீசிய 47வது ஓவரிலும் 17 ரன்கள் விளாசி 24 பந்துகளில் அரைசதத்தை சூர்யகுமார் நிறைவு செய்தார். கேப்டன் ராகுல் 38 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஒருநாள் தொடரை வென்றது இந்தியா: தேர்வாளர்களை குழப்பிய அஸ்வின், சூர்யா, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆடுகளத்தின் தன்மை, சிறிய பவுண்டரி அளவு ஆகியவை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் மனஉறுதியைக் குலைத்துவிட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு மறக்கமுடியாத நாள்

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சில் பெரிதாக எந்தத் தவறும் செய்யாத நிலையில் இந்த ஆட்டத்தின் பந்துவீச்சை எப்போதும் மறக்கமாட்டார்கள்.

ஆடுகளத்தின் தன்மை, சிறிய பவுண்டரி அளவு ஆகியவை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் மனஉறுதியைக் குலைத்துவிட்டது.

குறிப்பாக அறிமுக வீரர் ஸ்பென்சர் ஜான்சன் 8 ஓவர்கள் வீசி 61 ரன்களையும், சீன் அபாட் 10 ஓவர்கள் வீசி 90 ரன்களையும், கிரீன் 103 ரன்களையும் வாரி வழங்கினர்.

ஒருநாள் போட்டிகளில் 100 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய 4வது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளராக கேமரூன் கிரீன் மாறியுள்ளார்.

மன உறுதி குலையலாம்

ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 5வது தோல்வியைச் சந்தித்துள்ளது. உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இந்தத் தொடர் தோல்விகள் அணி வீரர்களின் மன வலிமையை சோதித்துப் பார்க்கும்.

அதேநேரம் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் இன்னும் விளையாடவில்லை என்பதால் முழு பலத்துடன் நாங்கள் களமிறங்கவில்லை என்று மார்தட்டிக் கொள்ளலாம்.

அதேநேரம் இந்திய பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்ய என்ன மாதிரியெல்லாம் தொழில்நுட்பங்களை, தந்திரங்களை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தினார்கள் என்றால் அது கேள்விக்குறிதான்.

இந்தூர் ஆடுகளம் 25 ஓவர்களுக்குப் பிறகுதான் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது.

ஒருநாள் தொடரை வென்றது இந்தியா: தேர்வாளர்களை குழப்பிய அஸ்வின், சூர்யா, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இலக்கு 33 ஓவர்களில் 317 ரன்களாக மாற்றப்பட்டது.

இதுதான் அஸ்வின்..!

ஆனால், ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்ட அஸ்வின் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு கடும் அழுத்தத்தை, நெருக்கடியை அளித்ததையும், ஆடுகளத்தை பயன்படுத்திய விதத்தையும், தொழில்நுட்பங்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.

இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு கிடைக்கும் ஆறுதல் வெற்றி, அவர்கள் மன உறுதி குலையாமல் வைத்திருக்கும்.

சவாலான இலக்கு

தோல்வி குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், “நல்ல பேட்டிங் பிட்சாகத்தான் பார்க்கும்போது இருந்தது, ஆனால், சிறிது மாறிவிட்டது. இந்திய பேட்டர்களுக்கு வாழ்த்துகள், 400 ரன்கள் என்பது எட்டமுடியாத அசாத்திய இலக்கு.

இதுபோன்ற இலக்கை சேஸிங் செய்வது சவாலானது என்பதைப் பல போட்டிகளில் பார்த்திருக்கிறேன். நாங்கள் சிறப்பாகவே ஆடி வருகிறோம், இருப்பினும் சில தவறுகள் செய்திருக்கிறோம்,” எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை பிரசித் கிருஷ்ணா ஓவரில் தொடக்கத்திலேயே மேத்யூ ஷார்ட்(9), ஸ்மித்(0) ஆட்டமிழந்ததால் நெருக்கடி அதிகரித்தது. வார்னர், லாபுஷேன் இருவரும் அணியை சரிவிலிருந்து கடந்த போட்டியைப் போல் மீட்டனர்.

ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இலக்கு 33 ஓவர்களில் 317 ரன்களாக மாற்றப்பட்டது. மழை நின்றபின் ஆட்டம் தொடங்கியதும் ஆடுகளத்தின் தன்மையை அஸ்வின் நன்கு பயன்படுத்தினார்.

ஒருநாள் தொடரை வென்றது இந்தியா: தேர்வாளர்களை குழப்பிய அஸ்வின், சூர்யா, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மழை நின்றபின் ஆடுகளத்தின் தன்மையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

‘வலதுகை வார்னர்’

அஸ்வின் வீசிய 15வது ஓவரில், டேவிட் வார்னர், இங்கில்ஸ் இருவரையும் வெளியேற்றினார். அதிரடியாக ஆடிய வார்னர் 53 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

இடதுகை பேட்டரான வார்னர், திடீரென வலதுகையில் பேட் செய்தார். ஸ்விட்ச்ஹிட் முறையில் பேட் செய்தாலும் பரவாயில்லை, வலதுகை பேட்டராகவே மாறி பேட் செய்த நிலையில் கால்காப்பில் வாங்கி வார்னர் வெளியேறினார்.

மாறிய ஆடுகளம்

மழை நின்றபின் ஆடுகளத்தின் தன்மையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைத்து பந்து நன்கு சுழன்றதால், ஆஸ்திரேலிய பேட்டர்கள் நிலைத்து பேட் செய்வது கடினமாக இருந்தது.

ஆஸ்திரேலிய அணியின் டெய்லென்டர் பேட்ஸ்மேன் சீன் அபாட் அதிரடியாக பேட் செய்து 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஹேசல்வுட் 23 ரன்கள் சேர்த்தனர். மற்ற வகையில் பெரிதாக எந்த பேட்ஸ்மேனும் சோபிக்கவில்லை.

ஒருநாள் தொடரை வென்றது இந்தியா: தேர்வாளர்களை குழப்பிய அஸ்வின், சூர்யா, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலிய அணி 89 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் அடுத்த 51 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஏறக்குறைய 51 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு பலமாக இருக்கிறது என்றாலும், ஃபீல்டிங், கேட்ச் பிடிக்கும் தன்மையில் மிகவும் பின்தங்கியுள்ளது.

ஷர்துல் தாக்கூர், கில் இருவரும் நேற்று கேட்சுகளை கோட்டைவிட்டனர், ஃபீல்டிங்கிலும் நேற்று சிறப்பாகச் செய்யவில்லை. இந்தத் தவறுகளை இந்திய அணி திருத்த வேண்டியுள்ளது.

400 ரன்கள் என்றபோதே வெற்றிதான்

ஒருநாள் தொடரை வென்றது இந்தியா: தேர்வாளர்களை குழப்பிய அஸ்வின், சூர்யா, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம், Getty Images

வெற்றிக்குப் பிறகு கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், “ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கவில்லை. 400 ரன்கள் எடுத்தபோதே எங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டது.”

“உலகக் கோப்பை அணியில் ப்ளேயிங் லெவனில் யாரைத் தேர்வு செய்வது என்பது ரோஹித்துக்கும், தேர்வாளர்களுக்கும் பெரிய குழப்பமாக மாறும். அனைவரும் சிறப்பாக விளையாடுகிறார்கள். கேட்சுகளை நாங்கள் கோட்டைவிட்டதைக் கவனித்தேன்.”

“ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு விதமான மின்னொளியில் ஆடுவதும், திடீர் பயணமும் சில சிரமத்தைக் கொடுத்தன. பல வீரர்கள் நீண்டகாலமாக ஓய்வின்றி விளையாடி வருகிறார்கள், உடல்நிலையை சீராக வைக்க முயல்கிறோம், ஃபீல்டிங் உடல்நிலையோடு நேரடியாக தொடர்புடையது என்பதால், உற்சாகத்தைப் பொறுத்து பீல்டிங் அமையும்,” எனத் தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *