
பட மூலாதாரம், Getty Images
தனியார் பயிற்சி வகுப்புகளுக்கான விதிமுறைகளை ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. மாணவர்களின் மனநலம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தப் புதிய விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதிகரித்து வரும் மாணவர்கள் தற்கொலை, வகுப்பறைகளில் ஏற்படும் தீ விபத்துகள், வசதியின்மை போன்ற சம்பவங்களும் விதிகளை உருவாக்கும்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
அதிகரித்து வரும் சட்டத்திற்கு புறம்பான பயிற்சி வகுப்புகளின் சிக்கல்களையும் ஒன்றிய அரசு ஒழுங்குமுறை கடிதத்தில் எடுத்துரைத்துள்ளது.
புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
பயிற்சி வகுப்புகளில் கட்டணம், வகுப்பறை, கற்பிக்கும் முறை மற்றும் ஆசிரியர்கள், வகுப்புகளின் விளம்பரம் போன்றவை தொடர்பான விரிவான விதிகள் இந்த ஒழுங்குமுறையில் வெளியிடப்பட்டுள்ளன.
1) ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவர குறிப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். வகுப்புகளில் கற்பித்தல் தொடங்கிய பிறகு எந்த வகையிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது.
பயிற்சி மையங்களில் ஆசிரியரின் தகுதிகள், பாடத்திட்டம், பாடத்திட்டம் முடிக்கும் காலம், விடுதி வசதி மற்றும் வசூலிக்கப்படும் கட்டணங்கள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விவரங்களுடன் இணையதளம் இருக்க வேண்டும்.
2) எந்தவொரு பயிற்சி வகுப்பிலும் கற்பிக்கும் ஆசிரியரின் குறைந்தபட்ச கல்வித் தகுதி பட்டப்படிப்பு வரை இருக்க வேண்டும். குற்ற வழக்கு பின்னணி கொண்ட ஆசிரியர்களை பணியில் அமர்த்தக் கூடாது.
3) 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை பயிற்சி வகுப்பில் சேர்க்க முடியாது அல்லது மேல்நிலைப் பள்ளி தேர்வுக்குப் பிறகுதான் மாணவர்களை வகுப்பில் சேர்க்க முடியும்.
4) தேர்வின் சிரம நிலை, பாடத்திட்டம், தயாரிப்பு மற்றும் படிப்பில் சேருவதற்குத் தேவையான முயற்சி குறித்து மாணவர்களுக்கு வகுப்பில் சேர்வதற்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
5) கல்விச் சூழல், கலாசார வாழ்க்கைச் சூழல், பள்ளித் தேர்வுகளுக்கான தயாராவது, போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துதல் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
6) பொறியியல் மற்றும் மருத்துவத் துறைகளில் சேர்க்கையுடன் மற்ற தொழில் வாய்ப்புகளுக்கான படிப்பும் மாணவர்களுக்கு கிடைக்கும். அதனால், மாணவர்கள் எதிர்காலத்தைப் பற்றி வலியுறுத்தாமல், வேறு மாற்றுத் தொழிலைத் தேர்வு செய்யலாம்.
7) மாணவர்களின் திறன்களை மதிப்பிடுவதற்கு தேர்வு நடத்தலாம். பயிற்சி மையங்கள், மாணவர்களின் திறன் குறித்த எதிர்பார்ப்புகளை பெற்றோருக்கு தெரிவிக்கலாம்.
8) பயிற்சி மையத்தில் அனுமதி பெறுவது என்பது மருத்துவம், பொறியியல், சட்டம், மேலாண்மை ஆகியவற்றுக்கான சேர்க்கை அல்ல என்றும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
9) பயிற்சி மைங்கள் மனநல மருத்துவர்களுடன் இணைந்து மாணவர்களின் மன ஆரோக்கியம் குறித்த பயிற்சி வகுப்புகள் மற்றும் அமர்வுகளை அவ்வப்போது நடத்த வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
10) பயிற்சி மையம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வியியல், பாட நேர வரம்பு மற்றும் பயிற்சி மையத்தில் உள்ள வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேவையற்ற மன அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்புகளின் சுமை ஆகியவற்றின் எதிர்மறை விளைவுகள் குறித்து பெற்றோர்கள் இந்தப் பயிற்சி மையங்களிலேயே ஆலோசனை பெறலாம்.
11) பயிற்சி மையம் நடத்தும் மதிப்பீட்டுத் தேர்வின் முடிவைப் பகிரங்கப்படுத்தக் கூடாது. மதிப்பீட்டுத் தேர்வின் முடிவுகளை ரகசியமாக வைத்திருக்கும் அதேவேளையில், மாணவர்களின் செயல் திறனைப் பற்றிய வழக்கமான ஆய்வுக்கு இது பயன்படுத்தப்பட வேண்டும். கல்வித் திறன் மோசமடைந்து வரும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் விதிகளின்படி ஆலோசனை வழங்க வேண்டும்.
பாதியில் இடைநின்றால் கட்டணம் திரும்ப கிடைக்குமா?

பட மூலாதாரம், Getty Images
பல்வேறு படிப்புகளுக்கு வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் நியாயமானதாக இருக்க வேண்டும்.
மாணவர் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டால், பயிற்சி வகுப்புகள் ‘சார்பு’ அடிப்படையில் 10 நாட்களுக்குள் மீதித் தொகையைத் திருப்பித் தர வேண்டும். மாணவர் விடுதியில் தங்கினால் விடுதி மற்றும் மெஸ் கட்டணங்களும் இதில் அடங்கும்.
பயிற்சி வகுப்பு கட்டிடம் ‘தீ பாதுகாப்பு குறியீடு’, ‘கட்டிட பாதுகாப்பு குறியீடு’ போன்றவற்றை பின்பற்றியிருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு உதவும் வகையில் முதலுதவி பெட்டி மற்றும் மருத்துவ வசதிகளை வைத்திருப்பது கட்டாயம்.
கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு வகுப்பறையிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும். போதுமான சூரிய ஒளி இருக்க வேண்டும்.
அதேபோல், சுத்தமான குடிநீர், புகார் பெட்டி, சிசிடிவி கேமராக்கள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள் போன்ற வசதிகள் இருக்க வேண்டும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்