நாட்றம்பள்ளியில் வேன் மீது மோதிய லாரி: 7 பெண்கள் பலி – விபத்து எப்படி நடந்தது?

நாட்றம்பள்ளியில் வேன் மீது மோதிய லாரி: 7 பெண்கள் பலி - விபத்து எப்படி நடந்தது?

நாட்றம்பள்ளி அருகே வேன் விபத்து- ஒரே கிராமத்தை சேர்ந்த ஏழு பெண்கள் பலி
படக்குறிப்பு,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த சண்டியூர் பகுதியில் உள்ள பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நாட்றம்பள்ளி அருகே சாலையில் பஞ்சராகி நின்றிந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில்14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கடந்த 8ஆம் தேதி இரண்டு வேன்களில் கர்நாடக மாநிலம் தரமசாலாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இன்று (திங்கள், செப்டம்பர் 11) காலை அனைவரும் சுற்றுலாவை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியக அடுத்த சண்டியூர் பகுதியில் உள்ள பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவரகள் பயணம் செய்த வேன் பஞ்சராகி நின்றுள்ளது.

ஆகையால், வேனில் இருந்தவர்கள் இறங்கி சாலையிலேயே நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அதே சாலையில் அதிவேகமாக வந்த லாரி அந்த வேன் மீது மோதியுள்ளது. இதைத் தொடர்ந்து சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேன் மோதி எதிர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நாட்றம்பள்ளி அருகே வேன் விபத்து- ஒரே கிராமத்தை சேர்ந்த ஏழு பெண்கள் பலி
படக்குறிப்பு,

நாட்றம்பள்ளி அருகே சாலையில் பஞ்சராகி நின்றிந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை

நாட்றம்பள்ளி அருகே வேன் விபத்து- ஒரே கிராமத்தை சேர்ந்த ஏழு பெண்கள் பலி
படக்குறிப்பு,

ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கடந்த 8 ஆம் தேதி 2 வேன்களில் கர்நாடக மாநிலம் தர்மசாலாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இதில் ஏழு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

அங்கிருந்த மக்கள் அவர்களை மீட்டு வாணியம்பாடி, நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்கள் மீரா (50), தெய்வானை (32), சேட்டுயம்மாள் (50), தேவகி (50), சாவித்திரி (42), கலாவதி (50), கீதாஞ்சலி (32) எனத் தெரிய வந்துள்ளது.

நாட்றம்பள்ளி அருகே வேன் விபத்து- ஒரே கிராமத்தை சேர்ந்த ஏழு பெண்கள் பலி
படக்குறிப்பு,

விபத்துக்கு உள்ளான குடும்பங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நாட்றம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 4 உடல்களையும் பார்வையிட்டு அவரது உறவினர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விபத்தைப் பற்றி உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி பெற்றுத் தரப்படும் என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *