ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மதங்களை கடந்த இந்து – முஸ்லிம் மனிதநேயம்: இவர்களின் நட்பின் பின் உள்ள சோகம் என்ன?
மதங்களை கடந்த இந்து – முஸ்லிம் மனிதநேயம்: இவர்களின் நட்பின் பின் உள்ள சோகம் என்ன?
மகாராஷ்டிராவின் தூலே நகரத்தைச் சேர்ந்த ஹசன் ஷா, மேரே கர் ஆகே தோ தேகோ அதாவது – நம்பிக்கையுடன் என் வீட்டிற்கு வாருங்கள், என் விருந்தாளியாக இருங்கள்- என்ற முன்னெடுப்பில் பங்கெடுத்துள்ளார். 2013 இல் தூலேயில் நடந்த கலவரத்தின் போது அவர் தனது மகனை இழந்தார்.
தூலே நகரில் மச்சி பஜார் பகுதியில் உள்ள இந்த மீன் மார்க்கெட்டில்தான் ஹசன் ஷாவின் மகன் ரிஸ்வான், 2013ல் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
கடந்த 15 வருடங்களில் மிக மோசமான கலவரங்களை தூலே கண்டுள்ளது. வகுப்புவாதம் காரணமாக நகரம் தீப்பிடித்து எரிவதை உள்ளூர்வாசிகள் பார்த்துள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனை இழந்த பிறகு, சமூகங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை ஹசன் ஷா உணர்ந்தார். அதனால்தான் ‘மேரே கர் ஆ கே தோ தேகோ’ போன்ற முயற்சிகள் அவசியமானது என்று அவர் உணர்கிறார். (முழு தகவல் காணொளியில்)

நன்றி
Publisher: பிபிசிதமிழ்