Cuddalore Bus Accident:விபத்தில் 3 பேர் பலி: ரூ. 2 லட்சம் நிதி

சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடலூர் குறிஞ்சிப்பாடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதி உதவி அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த விக்டோரியா, விஜயக்குமார், தாமரைச் செல்வன் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சாலை விபத்து

குறிஞ்சிப்பாடி அருகே தனியார் பேருந்து, கார், பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் பேருந்தும், காரும் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டபோது, பின்னால் வந்த பைக் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பைக்கில் வந்த இருவர், காரில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.abplive.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *