தேர்தல் பத்திரங்கள்: எந்தக் கட்சி எவ்வளவு பணம் பெற்றது? பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

தேர்தல் பத்திரங்கள்: எந்தக் கட்சி எவ்வளவு பணம் பெற்றது? பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

தேர்தல் பத்திரங்கள்: எந்தக் கட்சிக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது? பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், Getty Images

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எஸ்பிஐ தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தங்களிடம் வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் தற்போது அந்தப் பட்டியலைத் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக 300 பக்கத்திற்கும் மேற்பட்ட இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில்,

  • முதல் பட்டியலில் பத்திரத்தை வாங்கிய நிறுவனங்களின் பெயர்கள், எந்த தேதியில் அவை வாங்கப்பட்டன, பத்திரத்தின் தொகை ஆகிய விவரங்கள் உள்ளன.
  • இரண்டாவது பட்டியலில் அவை எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு எந்தத் தேதியில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டன என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் அதிகம் நிதி பெற்ற கட்சியாக இருப்பது ஆளும் பாரதிய ஜனதா கட்சி, அதற்கடுத்த இடங்களில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற காட்சிகள் உள்ளன. இந்தப் பட்டியலில் வேதாந்தா போன்ற நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியளித்துள்ளன.

இரண்டு பட்டியல்களாக வெளியீடு

தேர்தல் பத்திரங்கள்: எந்தக் கட்சிக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது? பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், ECI

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல்களில் நன்கொடையாளர்கள் மற்றும் கட்சியின் விவரங்கள் தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன.

எந்தெந்த நன்கொடையாளர்கள் எந்தெந்த கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக நிதியளித்தார்கள் என்பதைக் குறிப்பிடாமல், அதன் அசல் வடிவில் தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டுமென எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக நிதியளிக்கும் நன்கொடையாளர்கள் மற்றும் அவற்றைப் பெறும் அரசியல் கட்சிகள் என தனித்தனியாக இரண்டு பட்டியல்கள் பராமரிக்கப்படுகிறது.

எல்லாவற்றையும் ஆய்வு செய்து, ஒரு குறிப்பிட்ட நன்கொடையாளர் எந்தக் கட்சிக்கு நிதியளித்தார் என்பதைப் பட்டியலிட அதிக நேரமும் உழைப்பும் தேவை என்பதைக் காரணம் காட்டி, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க தங்களுக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்குமாறு எஸ்பிஐ கேட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாகத்தான் அசல் பட்டியல்களை வெளியிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு எஸ்பிஐ அளித்த விவரங்கள் இப்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *