ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஷீலா பவல், திருமணத்திற்கு பின்னர், சம்பாதிக்க வேண்டும் என தையல் கடையை தொடங்கினார்
சுய தொழிலில் கோலோச்சும் தோடர் இனப்பெண்கள்
ஒரு பெண், கணவரின் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்காமல் தனக்கென வருமானத்தை ஈட்டும்போது என்ன நடக்கும்? இதற்கான பதில்தான் நீலகிரியில் உள்ள தையல் கலைஞர் ஷீலாவின் வாழ்வு. ஷீலா பவல், திருமணத்திற்கு பின்னர், தான் சம்பாதிக்கவேண்டும் என்ற முடிவில் 1992ல் தையல் கடையை தொடங்கினார்.
அவரின் ஷாலோம் ஊட்டி சங்கம், கடந்த 30 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட தோடர் இன பழங்குடி பெண்களை தொழில் முனைவோராக மாற்றியுள்ளது. ஆரம்பத்தில் தோடர் பெண்களின் தையல் எம்பிராய்டரி நிறைந்த சால்வையை வெளிநாட்டில் இருந்துவரும் சுற்றுலாவாசிகளுக்கு மட்டுமே விற்பனை செய்துவந்தனர்.

ஷீலா பவல், திருமணத்திற்கு பின்னர், தான் சம்பாதிக்கவேண்டும் என்ற முடிவில் 1992ல் தையல் கடையை தொடங்கினார்.
காலத்திற்கு ஏற்ப லேப்டாப் கவர், கீசெயின் கவர், செல்போன் கவர், கைப்பை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வடிவங்களில் அந்த பொருட்களை மாற்றியதால் தோடர் பெண்கள் தொடர்ந்து வருமானம் ஈட்ட தொடங்கினர்.
தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்
படத் தொகுப்பு: மதன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்