ஆனால், ராமர் கோயில் திறப்பு விழா, அரசு நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. பிரதமர், உத்தரப்பிரதேச முதல்வர் மற்றும் அரசியல் சாசன பதவிகளை வகிக்கும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். இந்த அரசியல் மயமாக்கல் சரியல்ல. மேலும், மதம் என்பது தனிப்பட்ட விருப்பம், அது அரசியல் ஆதாயத்துக்கான கருவியாக மாற்றப்படக் கூடாது. அரசியலமைப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின்படி, அரசு எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் கொண்டிருக்கக் கூடாது” என்று நேற்று ஊடகத்திடம் கூறினார்.

இந்த நிலையில், சீதாராம் யெச்சூரியின் கருத்தை உறுதிப்படுத்திய சி.பி.ஐ(எம்), ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டோம் என அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், `அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள சி.பி.ஐ(எம்)-ன் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரிக்கு அழைப்பு வந்திருக்கிறது. சி.பி.ஐ (எம்)-ன் கொள்கையானது மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பதும், அதனைப் பின்பற்றும் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமையைப் பாதுகாப்பதும்.

நன்றி
Publisher: www.vikatan.com
