IND vs AFG: சூப்பர் ஓவரில் ரோஹித்தின் ‘அஸ்வின் லெவல் ஐடியா’ வெற்றிக்கு உதவியது எப்படி? இது சாத்தியமா?

IND vs AFG: சூப்பர் ஓவரில் ரோஹித்தின் 'அஸ்வின் லெவல் ஐடியா' வெற்றிக்கு உதவியது எப்படி? இது சாத்தியமா?

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: வெற்றிக்கு காரணமான ரோஹித்தின் 'அஸ்வின் லெவல் ஐடியா'

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால், வெற்றியைத் தீர்மானிக்க இரண்டு ‘சூப்பர் ஓவர்கள்’ விளையாட வேண்டியிருந்தது.

இதுபோல், டி20 போட்டியின் முடிவை தீர்மானிக்க இரண்டு சூப்பர் ஓவர்கள் விளையாடுவது இது முதல் முறையல்ல.

அக்டோபர் 2020இல், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டியின் முடிவைத் தீர்மானிக்க இரட்டை சூப்பர் ஓவர்கள் தேவைப்பட்டது. அதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது என்ன?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 212 ரன்களை குவித்ததால் வெற்றி நடை போடும் என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால், 213 ரன்கள் இலக்கை எட்ட, ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்திய அணிக்கு நிகராக ஆக்ரோஷத்துடன் விளையாடியதால், கடைசி ஓவர் வருவதற்குள், இந்திய ரசிகர்களுக்கு வெற்றியின் மீதான நம்பிக்கை குறைந்தது. இருப்பினும் அதன்பிறகு போட்டியில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

‘டிரா’ எப்படி இருந்தது?

ரோஹித் சர்மா, ரவி பிஷ்னோய் வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

டி20 போட்டியின் முடிவை தீர்மானிக்க இரண்டு சூப்பர் ஓவர்கள் விளையாடுவது இது முதல் முறையல்ல.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆப்கானிஸ்தான் அணி வெற்றிக்குத் தேவைப்பட்ட ஒரே ஒரு ரன்னுக்கு குறைவாக 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

மேலும், முகேஷ் குமார் வைட் வடிவத்தில் இரண்டு கூடுதல் ரன்கள் கொடுத்தார். மேலும் முதல் டவுனில் வந்து கடைசி வரை நிலையாக விளையாடிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் குல்பாடின் நயீப், அந்த ஓவரிலும் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸரை அடித்தார்.

அதன் மூலம் கடைசி இரண்டு பந்துகளில் ஆப்கானிஸ்தான் ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி வாய்ப்பு என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால், கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரி எடுக்க முடியாத நிலையில், ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்களும், ஆறாவது பந்தில் இரண்டு ரன்களும் மட்டுமே நயீப் எடுக்க முடிந்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

முதல் சூப்பர் ஓவரில் என்ன நடந்தது?

ரோஹித் சர்மா, ரவி பிஷ்னோய் வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

முகேஷ் குமார் வைட் பந்துகளில் இரண்டு ரன்கள் கூடுதலாகக் கொடுத்தார்.

போட்டி ‘டிரா’ ஆனதால் சூப்பர் ஓவர் தேவைப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டை எடுத்து ஆடிய ஆப்கானிஸ்தானின் குல்பாடின் நயீப், தான் எதிர்கொண்ட முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து இரண்டாவது ரன் எடுக்க முயன்றபோது ரன் அவுட் ஆனார்.

சஞ்சு சாம்சனை நோக்கி விராட் கோலி வீசிய பந்தில், இரண்டாவது ரன்னை முடிப்பதற்குள் நயீப் ரன் அவுட் ஆனார்.

ஆப்கானிஸ்தான் அணி 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஒரு பவுண்டரியும், முகமது நபி ஒரு சிக்ஸரும் அடித்தனர். இந்தியா தனது முதல் சூப்பர் ஓவரில் அனைத்து ரன்களையும் எடுத்தது.

ரோஹித் சர்மா 2 சிக்ஸர்களுடன் 13 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 ரன்களும் எடுத்த நிலையில், மற்றொரு ரன் எக்ஸ்ட்ரா வடிவில் வந்தது. சூப்பர் ஓவரில் இரு அணிகளும் சம ரன்களை எடுத்ததால், இரண்டாவது சூப்பர் ஓவர் தேவைப்பட்டது.

ரோஹித் சர்மா, ரவி பிஷ்னோய் வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சஞ்சு சாம்சனை நோக்கி விராட் கோலி வீசிய பந்தில், இரண்டாவது ரன்னை முடிப்பதற்குள் நயீப் ரன் அவுட் ஆனார்.

இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா 3 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 11 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

பெரிய ஷாட்களை ஆடலாம் என்ற எதிர்பார்ப்புடன் சூப்பர் ஓவரை தொடங்கக் கொண்டுவரப்பட்ட ரிங்கு சிங், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து திரும்பினார்.

உடனே வந்த சஞ்சு சாம்சனும் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனார். அது அந்த ஓவரின் ஐந்தாவது பந்து. இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி இரண்டாவது சூப்பர் ஓவரில் 5 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையடுத்து, இரண்டாவது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்யத் தொடங்கினர். ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் தனது அபார திறமை மூலம் மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி முடிவைத் தீர்மானித்தார்.

முதல் பந்தில் முகமது நபி ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்தார். அதன் மூலம் கிரீஸுக்கு வந்த புதிய பேட்ஸ்மேன் கரீம் ஜனத் இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் ரஹ்மானுல்லா குர்பாஸிடம் ரிங்கு சிங் கேட்ச் கொடுத்து ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது விக்கெட்டையும் இழந்தது.

இதனால் இரண்டாவது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட் இழப்புக்கு ஒரு ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

‘போட்டியின் ஆட்டநாயகன்’ ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா, ரவி பிஷ்னோய் வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 121 ரன்களும், ரிங்கு சிங் 69 ரன்களும் எடுத்தனர்.

கோலி மற்றும் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களும், ஷிவம் துபே 1 ரன்னும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களில் ஃபரீட் அஹமட் 3 விக்கெட்டுகளையும், அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தான் அணி 213 ரன்கள் என்ற இலக்கை அடைய களமிறங்கியது. ரஹ்மானுல்லா குர்பாஸ் 50, இப்ராஹிம் சத்ரான் 50, நயீப் 55, முகமது நபி 34 ரன்கள் எடுத்தனர்.

இந்திய பந்துவீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், அவேஷ் கான், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ரோஹித் சர்மா தனது 20 ஓவர் இன்னிங்ஸ் மற்றும் இரண்டு சூப்பர் ஓவர்களுக்குப் பிறகு ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது பெற்றார். சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் சர்மாவின் ஐந்தாவது சதம் இது.

ரோஹித் சர்மா, ரவி பிஷ்னோய் வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

ரோஹித் சர்மாவின் அஸ்வின் லெவல் ஐடியா

நேற்று நடந்த இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியின் முதலாவது சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

ஸ்ட்ரைக்கில் ஜெய்ஸ்வால் இருந்த போது, மறுமுனையில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா, சமயோசிதமாக ஒரு முடிவெடுத்தார்.

சூப்பர் ஓவருக்கு முன்பாக விளையாடி சதமடித்து, களத்தில் களைப்பாக இருந்த அவரால் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க முடியாது என்று தோன்றியதன் காரணமாக ரிட்டையர்டு ஆகி பெவிலியன் திரும்பினார்.

அவருக்கு பதிலாக ரிங்கு சிங் களமிறங்கினார். இது பலருக்கு ஆச்ச்சரியமளித்த நிலையில், போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இது குறித்து பேசினார்.

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: முதல் சூப்பர் ஓவரில் அவுட் ஆன ரோஹித் சர்மா இரண்டாவது முறை வந்தது எப்படி?

பட மூலாதாரம், SCREENGRAB

“களத்தில் பெவிலியன் திரும்பிய ரோஹித்தின் யோசனை அஸ்வின் லெவல் யோசனை,” என்றார்.

2022ஆம் ஆண்டு லக்னை சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியின் போது, இதே போல களத்தில் நின்ற அஸ்வின் கடைசி ஓவரில் ரிட்டையட்டு ஆகி புதிய பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு அளித்தார். இதனால் அந்த அணியால் அப்போது சில கூடுதல் ரன்களை சேர்க்க முடிந்தது.

அதே பாணியில் களைப்பாக இருந்த ரோஹித் சர்மா, ரிட்டையர்டு ஆகி பெவிலியன் திரும்பிதை தான் ராகுல் டிராவிட், ‘அஸ்வின் லெவல் திங்கிங்’ என்று வர்ணித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *