பட்டியல் சமூகத்தினரை மூர்க்கமாகத் தாக்கிய விவகாரம்;

2016-ம் ஆண்டு திருமண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தோக்கவாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா, அவரின் மனைவி, மகன் (பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார், விஜயகுமார் ஆகியோர், அவர்களை சாதிரீதியாகத் திட்டி, கண்மூடித்தனமாகத் தாக்கினர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதையடுத்து, தங்களைத் தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர்மீதும் வழக்கு பதிவுசெய்யக் கோரி, ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல்பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல்

பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல்

இந்த வழக்கு விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்று வந்தது. முன்னதாக, குடும்பத்தினரைத் தாக்கிய காவலர்கள்மீது இதுவரை வழக்கு பதிவுசெய்யாததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *