கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆன ஒரு வருடத்திற்குள் இறப்பு!… இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!… ICMR!

கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆன ஒரு வருடத்திற்குள் இறப்பு!… இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!… ICMR!

கொரோனா தொற்றுக்கு ஆளான நோயாளிகளில் 6.5% பேர் மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஓராண்டுக்குள் இறந்ததாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நெட்ஒர்க்கின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

ஆய்வின் முடிவில், ‘நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன், குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 60% பாதுகாப்பை வழங்கியது. 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், இணைநோய் (Comorbidities) பாதிப்பு இருந்தவர்கள் மற்றும் கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஒரு வருடத்திற்குள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலை 18-45 வயதுள்ளோருக்கான ஆய்வில் பங்கேற்றவர்களிடமும் காணப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்த முடிவுகள், ஆரம்ப கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்புடையது, கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளான அனைத்து நோயாளிகளுக்கும் இதை பொதுமைப்படுத்த முடியாது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிட்-19 குழுவிற்கான தேசிய மருத்துவப் பதிவேட்டால் நடத்தப்பட்ட இந்த ஆய்வானது, ஒரு வருடத்திற்குப் பிந்தைய டிஸ்சார்ஜ் இறப்பு தொடர்பான காரணிகளை மதிப்பீடு செய்துள்ளது. ஐ.சி.எம்.ஆர், கோவிட்-19க்கான தேசிய மருத்துவப் பதிவேட்டை நாடு முழுவதும் 31 மையங்களில் பராமரித்து வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து கோவிட்-19 நோயாளிகளும் டிஸ்சார்ஜ் ஆன பிறகு ஒரு வருடம் வரை அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொள்ளப்பட்டனர்.

‘பிப்ரவரி 2023 வரை சேகரிக்கப்பட்ட தரவு, பகுப்பாய்வின்படி, 14,419 பங்கேற்பாளர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது தொடர்பு கொண்டதாகக் கூறினர். மேலும் 942 (6.5%) பேர் பல காரணங்களால் இறந்துவிட்டதாகப் பதிவாகியுள்ளது. கோவிட் -19 தொற்றில் இருந்து மீண்ட பிறகும், அதிக இறப்பு இணை நோய் உள்ள மக்களிடம் ஏன் காணப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கல்லீரல்அழற்சி மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற நிலைமைகளைக் கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் அவர்கள் சிக்கலான கோவிட் -19 பின் விளைவுகளைப் பெற வாய்ப்புள்ளது’ என்று ஆய்வை மேற்கோண்ட விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.கோவிட்-19 தொற்றுக்கு அடுத்த ஆண்டில் பதிவான இறப்புகளை விளக்க, பல்வேறு கருதுகோள்கள் பரிசீலிக்கப்பட்டதாக ஆய்வு கூறுகிறது. இந்த மரணங்கள் நீடித்த வீக்கம், வைரஸ் காரணமாக உறுப்பு சேதம், எண்டோடெலியல் செயலிழப்பு உள்ளிட்ட காரணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *