கோவை மாவட்டம், ஆனைமலையில் அமைந்திருக்கும் மாசாணி அம்மன் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், டார்கெட் நிர்ணயித்து பணம் வசூல் செய்வதாகவும், அம்மனுக்குச் சாற்றப்படும் புடவைகளைக் கோயில் கணக்கில் வரவு வைக்காமல், வெளியில் விற்பதாகவும், அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஏற்கெனவே குற்றம்சாட்டி வந்தனர்.
இந்தச் சூழலில் தற்போது அங்கு நடைபெற்ற வருடாபிஷேக விழாவிலும், சர்ச்சை வெடித்திருக்கிறது. பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயிலில் நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நடந்த கலசாபிஷேக விழாதான், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்திக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது.


மாசாணி அம்மன் கோயில் நிர்வாகத்தின்மீது எழும் புகார் குறித்து விசாரணையில் இறங்கினோம்…
நன்றி
Publisher: www.vikatan.com