“இக்கட்டான தருணங்களில்கூட துணிச்சலாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள், பல சமயங்களில் சர்ச்சையாகிவிடுகிறதே?”
“நக்கல், நையாண்டி, நகைச்சுவை இல்லாமல் அரசியலில் இருக்க முடியாது. தன்னையே கிண்டல் செய்துகொள்ளும் நிலை என்பது வரவேற்கப்பட வேண்டிய நகைச்சுவை… அது கலைஞருக்குப் புரியும். ஆனால், பலருக்கு அது புரியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. சொந்தக் கட்சியை விமர்சனம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது… கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி அடையும் நிலைக்குச் சென்றால், டி.வி-யை நிறுத்திவிட்டு சென்றுவிடுவார்கள். அவர்கள் அனைவரும் என்ன தேசவிரோதிகளா?”


“ ‘சாதிவாரி கணக்கெடுப்பு கோருவதன் மூலமாக மக்களைப் பிரித்தாள நினைக்கிறது காங்கிரஸ்’ என்ற பா.ஜ.க-வின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?’’
“டேட்டா சேகரிப்பது எப்படி தவறாகும்… அதை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்றுதான் பார்க்க வேண்டும். பிரிவினையைக் கொண்டுவருவதாக கூறுவது தவறு. அவர்களின் இந்துத்துவ பார்வை என்பது, ‘வட இந்திய சம்ஸ்கிருத மேல்தட்டு வெஜிடேரியன்’ என்பதுதான். அவர்கள் சொல்லும் கோட்பாடுகளுக்கு மாறுபட்ட சமுதாயம் இன்னும் இருக்கிறது என்ற உண்மை வெளியில் வந்தவுடன், அவர்களின் போலி இந்துத்துவாவுக்கு ஆட்டம் கண்டுவிட்டது. அதனால் அஞ்சுகிறார்கள்.”


நன்றி
Publisher: www.vikatan.com