இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அவரது அலுவலகம் தெரிவித்திருக்கிறது. விருந்துக்காக அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரும், நாளை காலை 6 மணிக்குள் நாடாளுமன்ற வளாகத்துக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

அவர்களை அங்கிருந்து பாரத மண்டபத்துக்கு அழைத்துச் சென்று, விருந்து விழா முடிந்ததும் திரும்பவும் நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டுவரச் சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என மாநாட்டிற்கான செயல்பாடுகளைக் கவனித்துக்கொள்ளும் முக்தேஷ் பர்தேஷி தெரிவித்திருக்கிறார். இந்த விருந்தில் கலந்துக்கொள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி புறப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
நன்றி
Publisher: www.vikatan.com
