இந்தியா தலைமையில் 18-வது ஜி 20 உச்சி மாநாடு டெல்லி, பாரத் மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. இதில், அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட ஜி 20-ல் அங்கம் வகிக்கும் நாடுகளின் அதிபர்கள், பிரநிதிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, நாட்டின் பெயர் பாரத் என்று மாற்றப்போவதாக வெளியான செய்திகள் வெறும் வதந்தி என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியிருந்த நிலையில், இன்று நடைபெற்ற மாநாட்டில், பிரதமர் மோடியின் முன்னிருந்த பெயர்ப்பலகையில் இந்திய என்பதற்குப் பதில் பாரத் என்ற பெயர் இடம்பெற்றிருந்தது மீண்டும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
இந்த நிலையில், ஜி 20-ன் நோக்கம் என்று, பா.ஜ.க கூறிவந்த `ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற வாசகத்தை, காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், `ஒரே மனிதன், ஒரே அரசு, ஒரு வணிக குழுமம்’ என்று விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதுதான் ஜி 20-ன் வாசகம். இருப்பினும், ஒரே மனிதன், ஒரே அரசு, ஒரு வணிக குழுமம் என்பதில்தான் மோடி நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிகிறது. 2014-ல் பிரிஸ்பனில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில், பொருளாதார குற்றவாளிகளின் பாதுகாப்பான புகலிடங்களை அகற்றவும், பணமோசடியில் ஈடுபடுபவர்களை நிபந்தனையின்றி நாடு கடத்தவும், ஊழல்வாதிகள் தங்களின் செயல்களை மறைக்கும் சிக்கலான சர்வதேச விதிமுறைகள் மற்றும் வங்கி ரகசியங்களைக் குறைக்கவும் சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com