“காங்கிரஸ்தான் அரசியலமைப்பைக் கொண்டுவந்து, மோடியைப்


பா.ஜ.க ஆட்சியிலிருக்கும் மத்தியப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதை முன்னிட்டு, இப்போதிலிருந்தே அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தின் சாகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர் மோடியும், சிவராஜ் சிங் சௌஹானும் காங்கிரஸ் கட்சியைத் தவறாகப் பயன்படுத்தாமல் ஆட்சியைத் தக்க வைத்திருக்க முடியாது. காங்கிரஸ் இந்தியாவுக்கு என்ன செய்திருக்கிறது எனக் கேள்வி கேட்கிறார்கள். காங்கிரஸ்தான் இந்தியாவுக்கு அரசியலமைப்பைக் கொண்டுவந்தது.

மல்லிகார்ஜுன கார்கே

அதையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றியது. அதனால்தான் நரேந்திர மோடி, பிரதமர் மோடி ஆனார். அவருக்கு வழங்கப்பட்ட ஒரு சமமான களம்தான் இந்தியாவின் அரசியலமைப்பு. மேலும், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களெல்லாம் யார்… எனவே, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். சாதி அமைப்பை எதிர்த்த 16-ம் நூற்றாண்டின் ஆன்மிகக் கவிஞரான புனிதர் ரவிதாஸ் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

தேர்தல் நேரத்தில்தான் பிரதமர் மோடியும், சிவராஜ் சிங் சௌஹானும் ரவிதாஸை நினைவுகூருகிறார்கள். சாகரில் ரவிதாஸ் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டிய மோடிதான், டெல்லியில் 2019 ரவிதாஸ் கோயிலை புல்டோசர் மூலம் இடித்தார். அம்பேத்கர், ரவிதாஸ் போன்ற புகழ்பெற்ற தலைவர்களைத் தேர்தலுக்காக மட்டுமே பா.ஜ.க நினைவுகூருகிறது. பிரதமர் மோடி குஜராத்தை 13 ஆண்டுகளுக்கு மேலாகவும், இந்தியாவை சுமார் 10 ஆண்டுகளாகவும் ஆட்சி செய்துவருகிறார்.

காங்கிரஸ் தலைவர்கள்

ஆனால், குஜராத்தில் குழந்தைகள் இன்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில், பணம் கொடுத்து, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுப் பிரிவு மூலம் மிரட்டல் விடுத்து, கலவரம் செய்து, மக்களைப் பிரித்து அரசைக் கட்டமைத்தது பா.ஜ.க. மத்தியப் பிரதேசத்தில் சட்ட விரோதமான அரசே அதிகாரத்தில் இருக்கிறது.

2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபோது தக்காளி கிலோ ரூ15. இப்போது ரூ72. எல்.பி.ஜி சிலிண்டர் விலை 166 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. பருப்பு வகைகள் 129 சதவிகிதம் விலை உயர்ந்திருக்கின்றன. பழங்குடியினர்மீது சிறுநீர் கழிக்கும் வகையில்தான் பா.ஜ.க-வின் ஆட்சி இருக்கிறது. கர்நாடகாவில் 40 சதவிகித கமிஷன் ஆட்சியை அகற்றிவிட்டோம்” எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *