இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடியை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவினர் பாம்பன் பாலத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மீனவர் காங்கிரஸ் பிரிவின் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த மாநில மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், மற்றும் நிர்வாகிகள் ரவி, ரோவன் தல்மேதா, சகாயராஜ் உள்ளிட்ட சிலர் கைகளில் மோடிக்கு எதிரான பதாகைகளுடன் கறுப்பு பலூன்களையும் பறக்கவிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com