மத்திய அரசுக்குச் சிக்கல்:
ஒரு பக்கம் மாநில முதல்வர் ஆளுநரை நேரடியாகத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அமைச்சர் உதயநிதி, தங்கம் தென்னரசு மத்திய நிதியமைச்சரைத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். “ஆளுநர் மாநில அரசுக்கு எதிராக ஒரு தனி அரசு நடத்துவதுபோல ராஜ் பவனில் கூட்டம் நடத்தினர். அதனை மாநில அரசும் தவிர்த்துவிட்டது. கூட்டத்துக்குப் பிறகு மாநில அரசிடமிருந்து ஒருங்கிணைப்பு இல்லை என்ற அறிக்கை அரசுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. அந்த கோபத்தின் வெளிப்பாடுதான் அப்படி ஆளுநர் குறித்து முதல்வர் பேசியிருப்பது.


அதேபோல, இந்த பேரிடர் பாதிப்புகளுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து பணத்தைக் கொடுத்துவிட்டு மத்திய அரசு தொகுப்பிலிருந்து நிதியை விடுவித்தது போல மத்திய அமைச்சர்கள் தொடங்கி அண்ணாமலை வரை பேசுகிறார்கள். அது வெள்ளம் வந்திருந்தாலும் இல்லை என்றாலும் அரசுக்கு வரவேண்டிய பணம். அந்த சூழலில்தான் அமைச்சர் உதயநிதி பதில் சொல்லியிருக்கிறார். இப்போது மத்திய அரசு மாநில அரசுக்குப் பணம் கொடுத்தாலும் நாங்கள்தான் போராடி வாங்கியிருக்கிறோம் என்று திமுக சொல்லும். பணம் தரவில்லை என்றாலும், மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது என்று சொல்வார்கள். உண்மையில் இப்போது சிக்கல் மத்திய அரசுக்குத்தான்” என்றார்கள் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com