மக்களே…! அரசு பேருந்துகளில் இன்று முதல் 2,000 ரூபாய் நோட்டு வாங்க தடை…! போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு…!

மக்களே…! அரசு பேருந்துகளில் இன்று முதல் 2,000 ரூபாய் நோட்டு வாங்க தடை…! போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு…!

அனைத்து கிளை மேலாளர்களும் இன்று முதல் நடத்துனர்கள், பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டு தாள்களை பயணத் தொகையாக பெறக்கூடாது. அப்படி நடத்துனர்கள் யாரேனும் ரூ.2000 நோட்டுத் தாள்களை பயணிகளிடமிருந்து பெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட நடத்துனரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி 30.09.2023 அன்று வரை ரூ.2000 நோட்டுக்கள் வங்கியில் செலுத்த இயலும். மேலும் 01.10.2023 முதல் ரூ.2000 நோட்டுக்கள் வங்கியில் செலுத்த இயலாது நமது கழகத்தில் 30.09.2023 அன்று பெறப்படும் வசூல் தொகை வங்கியில் 03.10.2023 செவ்வாய்க்கிழமை அன்று மட்டுமே செலுத்த இயலும் (ஏனெனில் 01.10.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை, 02.10.2023 அன்று காந்தி ஜெயந்தி விடுமுறை).

எனவே அனைத்து கிளை மேலாளர்களும் இன்று முதல் நடத்துனர்கள், பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டு தாள்களை பயணத் தொகையாக பெறக்கூடாது என அறிவுறுத்த வேண்டும். அப்படி நடத்துனர்கள் யாரேனும் ரூ.2000 நோட்டுத் தாள்களை பயணிகளிடமிருந்து பெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட நடத்துனரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *