சீர்கெட்டு கிடக்கும் திருப்பத்தூர் பேருந்து நிலையம்;

சந்தன மாநகரம் என்று அழைக்கக்கூடிய திருப்பத்தூர் மாவட்டத்தின் பேருந்து நிலைய திட்டம், 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த பேருந்து நிறுத்துமிடங்களில் மேடு, பள்ளங்களாகவும் , மது பாட்டில்களாலும் நிறைந்தும் காணப்படுகிறது. மேலும் பேருந்து வெளியே செல்லும் இடங்களில் தூய்மையற்ற கழிப்பிடங்கள், அவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாயில் தேங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள், பேருந்து ஓட்டுநர்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்து வெளியே செல்லும் இடத்தில், நகராட்சி நவீன கட்டணக் கழிப்பிடமும், பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிப்பிடமும் உள்ளது. நீண்ட வருடங்களாகவே இந்த சிறுநீர் கழிப்பிடத்திலிருந்தும், நகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்திலிருந்து வரும் கழிவுநீரானது கலந்து கால்வாயில் தேங்கிய நிலையில் காணப்படுவதாகவும் அதுவும் திறந்த நிலையிலே கிடப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும் மது அருந்திவிட்டு மது பாட்டில்களைப் பேருந்து நிலையத்தின் ஓரங்களில் போட்டுவிட்டுச் சென்று விடுவதாகவும் பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர்.

பேருந்து நிலையத்தின் மைய்யப்பகுதிகளில் மேடும், பள்ளமாகவும் காணப்படுவதால், மக்கள் அவ்வழியாக அவசரமாகப் பேருந்தைப் பிடிக்கச் செல்லும்போது கீழே விழுந்து காயம் ஏற்படுவதாகவும், பேருந்து நிறுத்துவதில் சிரமமாக இருக்கிறது என்றும் பேருந்து ஓட்டுநர்கள் தெரிவித்தனர் .

அதுமட்டுமல்லாமல், மது அருந்துபவர்கள் மது அருந்திவிட்டு மது பாட்டில்களைப் பேருந்து நிலையத்தின் ஓரங்களில் போட்டு விடுவதாகவும் கூறினர். அதே சமயத்தில் அவ்விடத்தில் பொதுமக்கள் சிலர் குப்பைகளையும் சேர்ந்து போடுவதால் நீர் தேங்கி நோய் பரவுவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள். இதனால் சில ஓட்டுநர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சக ஓட்டுநர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் பேருந்து நிறுத்தும் பகுதிக்கு அருகாமையில் உள்ள ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து மற்றும் சீரற்ற நிலையில் காணப்படுகிறது.

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தின் சிறுநீர் கழிப்பிடம் சரிவரப் பராமரிக்காததால், மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அவ்வழியாகச் செல்லும் பொது மக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான பொது மக்கள் பேருந்து நிலையத்தின் சிறுநீர் கழிப்பிடத்தைப் பயன்படுத்தாமல் அதற்கு எதிரே அமைந்துள்ள நகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்தைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு இருக்கும் நிலையில் இவ்விரண்டு கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரானது பேருந்து வெளியே செல்லும் இடத்தில் உள்ள கால்வாயில் துர்நாற்றத்துடனும், கொசு முட்டைகளுடன் தேங்கிய நிலையில் காட்சியளிக்கிறது. இந்தப் பேருந்து நிலையத்தை ஒட்டி உள்ள வி.சி.எம் என்ற தெரு ஒன்று உள்ளது. இந்த தெருவைச் சார்ந்த மக்கள் இது குறித்து பலமுறை தகுந்த அதிகாரிகளிடமும் மற்றும் வார்டு கவுன்சிலர் போன்றவரிடம் எடுத்துரைத்தும் எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்தனர் .

கால்வாய்க்கு அருகாமையில் உள்ள கடை விற்பனையாளர்களும் எப்போதும் முகத்திற்கு மாஸ்க் அணிந்தபடியே இருப்பதாகவும் தெரிவித்தனர். இது குறித்து அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் விசாரித்த போது, “இவ்வழியாக நீங்கள் மூக்கை மூடாமல் சென்றால் நான் உங்களுக்கு காசு கொடுக்கிறேன்” என்று நிலைமையை விவரித்தனர்.

மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், நோய்த் தொற்று பரவும் அபாயமும் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக கடமையாற்றிய பொதுமக்கள் கேட்கிறார்கள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… 

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… 

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *