
பட மூலாதாரம், Getty Images
இந்த பேய் அறைகளில் சில பேய்கள் நிரந்தரமாக வசிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
எப்பொழுது நினைத்தாலும் எடின்பர்க் சென்று மனதுக்கு நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதும் அதற்கான பணம் என்னிடம் இருக்கவேண்டும் என்பதும் என் கனவு.
நிச்சயமாக இந்த கனவு பட்டியலில் புதிதாக ஒரு ஊர் சேர்க்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நான் ஸ்காட்லாந்திற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டேன். லண்டனில் இருந்து கிளாஸ்கோ வரை சாலையில் மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு சிறிய மலையில் சாலைகள் வளைந்து சென்றதற்கு ஏற்ப மழைநீரும் சென்றுகொண்டிருந்தது. ஸ்காட்லாந்தின் கனவுக் காட்சிகள் தான் இவை.
ஆனால் இந்தியர்களாகிய நாங்கள் மிகவும் விசித்திரமான மனிதர்களாக உள்ளோம். ரீல்களைப் பார்த்து மகிழ்கிறோம். பிறகு பணத்தைச் சேமித்து பயணம் செய்கிறோம். கடைசியாக அங்கு சென்று, “ஓ, இந்தியா இதை விட சிறந்தது,” என்று சொல்கிறோம்.
நானும் அப்படியே செய்தேன். முதல் நாள் கொஞ்சம் நடந்து சென்ற பின் அங்கு வசிக்கும் சகோதரி, “என்ன ஸ்காட்லாந்து மழை, காடுகள், பசுமை என கடல் போல் இருக்கிறது,” என்று கேட்டார்.
நான் எடின்பர்க்கில் காலடி எடுத்து வைத்த அன்றே அந்த நகரத்தின் மீது நான் காதல் கொண்டேன்.
முற்றிலும் அழகான நகரம். ஸ்காட்லாந்தின் தலைநகரம். கவிதை, அறிவியல், கலை வளம் மிக்க நகரம்.
வந்த அதே நாளில், எடின்பர்க் கோட்டையில் ஒரு நடை இருந்தது. உயரமான மலையில் அமைந்துள்ள இந்த புகழ் பெற்ற கோட்டைக்குள் நுழையும் போது, வலதுபுறம் ஒரு கோட்டை உள்ளது. எடின்பர்க் நகரமும், தொலைவில் உள்ள ஐரிஷ் கடலும் என்ன ஒரு அற்புதமான காட்சி.
மழை பெய்து கொண்டிருந்தது, (ஸ்காட்லாந்தில் உள்ளது போல). எனக்குப் பக்கத்தில் ஒரு தாத்தா பாட்டி நன்றாகக் குடையுடன் முன்னால் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அசல் இந்திய இயல்புப்படி நான் அவர்களின் குடைக்குள் செல்ல முடியுமா என்று முயற்சித்தேன்.

பட மூலாதாரம், ANAGHA PATHAK/BBC
எடின்பர்க் கோட்டையிலிருந்து பரந்துபட்ட காட்சிகளைக் காணமுடியும்.
பின்னர் அவர்கள் நேரடியாக என்னிடம், “பெண்ணே, எங்கள் குடைக்குள் வா” என்று சொன்னார்கள். உடனே நான் அங்கு சென்று மறைந்துகொண்டேன்.
நான் இங்கிலாந்தைச் சுற்றி எங்கு சென்றாலும், ஒரு தாத்தா அல்லது பாட்டியைச் சந்திப்பேன். அவர்கள் என்னைப் போலவே அதிக நேரம் கிடைக்கும் இடத்தில் இருந்ததால் என்னுடன் அரட்டையடிக்க முன்வருவார்கள்.
இவர் இங்கிலாந்தின் பிரிஸ்டலில் வசிப்பவர். குடையை எடுக்கும் முன் அவர் கேள்வி கேட்டார். “நீங்கள் பிரிஸ்டல் சென்றிருக்கிறீர்களா?” இது இப்போது ஒரு அழகான நகரம், ஆனால் அந்த நேரத்தில் அது எனது பயண பட்டியலில் இல்லை. ஏனெனில் என்னால் அங்கு செல்வதற்கு எனக்கான வாய்ப்பு அப்போது இல்லை. ஆமாம் நான் போக வேண்டும், இப்போது யோகம் வரும்போது பார்ப்போம் என்றார்கள்.
பிறகு எடின்பர்க் நோக்கி காரை ஓட்டினேன். என்ன அழகான நகரம் இது. உங்களுக்கு இங்கே என்ன பிடிக்கும்?
“இங்கே பேய்கள் இருக்கின்றன,” என்றார்கள்.
இப்போது எனக்கு இங்கே சென்று நேரம் செலவழிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது.
நான் ஒருவரிடம் கேட்டபோது அவர், “எடின்பர்க் ஐரோப்பாவின் பேய் தலைநகரம். அதற்காகவே மக்கள் இங்கு வருகிறார்கள்,” என்ற அவர், “நீங்கள் இங்கே பேய் சுற்றுலாவை முன்பதிவு செய்திருக்கிறீர்களா, இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.
கூகுளில் தேடினால் எடின்பர்க் பேய்கள் குறித்த கதைகள் கிடைக்கும்.
அவர் மேலும் கூறினார், “நீங்கள் முன்னர் சென்று வந்த கோட்டையிலும் பேய்கள் உள்ளன,” என்றார்.

பட மூலாதாரம், ANAGHA PATHAK/BBC
ஒரு காலத்தில் இந்தக் கோட்டையில் வாழ்ந்தவர்கள் இப்போது புராணக் கதைகளாக மாறிவிட்டனர்.
சீன சுற்றுலாப் பயணிகளின் ஒரு பெரிய குழு அந்த வழியாக சென்று கொண்டிருந்தது. அவர்களுக்கு ஒரு வழிகாட்டி இருந்தார். வேறொருவரின் வழிகாட்டியைப் பின்பற்றி நானும் செல்வது மிகவும் நல்லது. நான் எனக்குத் தேவையான தகவலைப் பெறமுடியும். அதே சமயம் பணமும் செலவு செய்யவேண்டியதில்லை.
இருப்பினும் அவர் சீன மொழியில் பேசினால் என்ன செய்வது? ஆனால் அவர் 6 அடி உயரமுள்ள ஸ்காட்லாந்துக்காரர். அவர் சீன மொழி பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
அந்தக் குழுவின் பின்னால் நான் மெதுவாக நடந்து சென்றேன். யாரும் என்னைக் கவனிக்கவில்லை. ஆனால் அவர் சொல்வதை நான் கேட்கும் தூரத்தில் ஊர்ந்து சென்றதால் தகவல்கள் கிடைத்தன.
இந்த கோட்டை அமைந்துள்ள மலை காஸ்ட்லராக் என்று அழைக்கப்படுகிறது. எரிமலை அகழ்வாராய்ச்சியால் உருவான இந்த மலை பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது.
பின்னர் பதினோராம் நூற்றாண்டில், ஒரு கோட்டை மற்றும் ஒரு அரண்மனை இங்கு கட்டப்பட்டது.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடித்ததால் உருவான மலையில் இந்த கோட்டை அமைந்துள்ளது.
ஸ்காட்லாந்தின் வரலாற்றில் மிக முக்கியமான அமைப்பாக இருப்பதால், அந்தக் கோட்டை இயற்கையாகவே பல முறை தாக்கப்பட்டது. ஐரோப்பாவில் அதிகம் தாக்கப்பட்ட கோட்டை இது என்று கூறப்படுகிறது.
இது அடிக்கடி அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்ட கோட்டையாக உள்ளது.
அதனால்தான் இந்தக் கோட்டையின் கீழ் ரகசிய சுரங்கப் பாதைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. நெட்வொர்க் ராயல் மைல் முதல் ஹோலிரூட் பிளேஸ் வரை அந்தப் பாதைகள் நீண்டுள்ளன.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான், இந்த இரகசிய சுரங்கங்களின் வலையமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

பட மூலாதாரம், ANAGHA PATHAK/BBC
கோட்டைக்கு அடியில் ரகசிய சுரங்கங்களின் வலையமைப்பு உள்ளது.
ஆனால் இந்த சுரங்கப்பாதைகள் சரியாக எங்கிருந்து செல்கிறது என்று அதிகாரிகளுக்கு தெரியவில்லை. அப்போது இசைக் கலைஞர் (பேக்பைப்பர்) ஒருவரை பிடித்தனர்.
அந்த இளைஞர் மிகவும் இளமையாக இருந்தார். அவர் இந்த சுரங்கங்களுக்குள் இறக்கப்பட்டார். அவர் இசைக்குழலை வாசித்தபடி முன்னோக்கி நடந்தார். மேலும் மேலே இருந்தபடியே அவரது குரலின் ஒலியைக் கேட்டுக் கொண்டு அதிகாரிகள் முன்னும் பின்னுமாக நடந்தபடி சுரங்கப்பாதைகளை வரைபடமாக்கிக் கொண்டிருந்தனர்.
ஆனால் திடீரென்று சத்தம் நின்றது. அவரைத் தேட ஒரு மீட்புக் குழு அனுப்பப்பட்டது. அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தேடுதல் நடத்தப்பட்டது. ஆனால் அந்த இளைஞனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் இறந்துவிட்டார் என்றாலும் அவரது உடல் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் பிறகு, அடுத்த சில நூறு ஆண்டுகளுக்கு சுரங்கப்பாதை மூடப்பட்டது.
“காற்று இல்லாத நாட்களிலும், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இல்லாத நாட்களிலும், தெருவில் வாகனச் சத்தம் இல்லாத நாட்களிலும், தரையில் இருந்து அவரது குழலிசையின் மெல்லிய சத்தம் இன்னும் கேட்கும். அந்த இளைஞன் என்னைக் காப்பாற்று என்று சொல்வது போல் இருந்தது” என்றார் வழிகாட்டி.
ஒருவேளை அது காற்று அல்லது வேறு ஏதாவது காரணமாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு மெல்லிய சத்தம் உணரப்பட்டது.
பேய் கதைகள் யாருக்குத்தான் பிடிக்காது? பேய்களின் சுவாரசியமான கதைகளை அவர்கள் எவ்வளவு பயந்தாலும் கேட்கவே அனைவரும் விரும்புவார்கள். சுற்றுலா பயணிகள் எப்படி அதற்கு விதிவிலக்காக இருக்க முடியும்?
அதனால்தான் இப்போது எடின்பர்க்கின் சுற்றுலா வணிகத்தில் பேய்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இப்படிப் பல கதைகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த எடின்பர்க் கோட்டையில் இன்னொரு பேய் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பேயும் ஒரு இசைக் கருவி வாசிப்பவருக்கும் சொந்தமானது. இவர்தான் டிரம்மர். சில நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் அந்தப் பேயைப் பார்ப்பதாகக் கூறுகின்றனர்.
1650 இல் இந்த கோட்டையில் முதலாம் சார்லஸ் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு, உடலில் தலையில்லாமல் ஒரு உருவம் குதிரையின் மீது அமர்ந்தபடி செல்வதை பலர் பார்த்திருக்கின்றனர். சில நேரங்களில் இந்த உருவம் ஒரு டிரம் வாசிக்கிறது.

பட மூலாதாரம், ANAGHA PATHAK/BBC
இந்தக் கோட்டை பலமுறை தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறது.
இந்த கோட்டையில் ஒரு சிறை உள்ளது. போர்க் கைதிகள் அங்கு பயங்கரமான சூழ்நிலையில் அடைக்கப்பட்டனர். அங்கு சிலர் இறந்தாலும், பல நாட்களாகியும் அவர்களது உடலை யாரும் அகற்றவில்லை.
சில நேரங்களில் கைதிகளுக்கு பல மாதங்களாக உணவு வழங்கப்படவில்லை. பின்னர் அவர்கள் இந்த இறந்த கைதிகளின் இறைச்சியை சாப்பிட வேண்டிய நிலை கூட ஏற்பட்டது.
இப்போது அதே கைதிகளின் பேய்கள் இங்கு உலவுவதாக கூறப்படுகிறது.
2003ல், இங்கு சில தொழிலாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கைதிகளின் பேய்கள் அப்போது தங்களை பின்தொடர்ந்து சென்று துன்புறுத்துவதாக தொழிலாளர்கள் கூறினர்.
அவர்கள் இந்த பேய்களின் படங்களையும் எடுத்து வந்தனர். அதே நேரத்தில் நீல நிற பலூன்கள் தொழிலாளர்களின் தலைக்கு மேலே மிதப்பதைக் காணலாம். இதைத்தான் பேய் என்று அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டார்கள்.
இப்போது பலர் இந்த கோட்டையில் இரவில் அல்லது பகலில் கூட தனியாக வேலை செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
இந்த பேய்களின் புகழ் என்னவென்றால், சில ஆராய்ச்சியாளர்களும் இங்கு நடக்கும் விசித்திரமான விஷயங்களைப் பற்றி ஆய்வு செய்து தடயங்களைக் கண்டுபிடிக்க முயன்றனர்.
22 ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள நிலத்தடி சுரங்கங்களில் 10 நாள் தேடுதல் பணி நடத்தப்பட்டது. டாக்டர் வைஸ்மேன் அந்த பணிகளுக்குத் தலைமை தாங்கினார்.
அவர் பிபிசியிடம் பேசிய போது, “மக்களுக்கு பேய் அனுபவங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை விட எப்படி, ஏன் அவர்களுக்கு பேய் அனுபவங்கள் ஏற்பட்டன என்பதைக் கண்டுபிடிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது,” எனக்கூறினார். “தங்கள் புகைப்படங்களில் எங்காவது பேய்கள் இருப்பதாக பலர் கூறுகின்றனர். இந்த புகைப்படங்கள் எவ்வாறு சிதைக்கப்பட்டன என்பதை நாங்கள் கண்டுபிடிக்கப் போகிறோம்.”

இங்கே பேய்கள் தொலைந்து போகும் அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அவரது குழுவில் அதிநவீன ஒலிப்பதிவு கருவிகள் இருந்தன. மனிதாபிமானமற்ற செயல்கள் நடைபெறுகிறதா என அவற்றைக் கொண்டு கண்டறிய முயன்றனர்.
அவர் சில தன்னார்வலர்களை இந்த சுரங்கங்களுக்குள் அனுப்பினார்.
அவர்களில், பேய்கள் இருப்பதாகக் கூறப்படும் சுரங்கப் பாதைகளுக்குச் சென்றவர்களில் 51 சதவீதம் பேர் மனிதர்களுக்குத் தொடர்பற்ற அமானுஷ்ய சக்தி ஒன்றை உணர்ந்தனர். அதே நேரத்தில் பேய்கள் இல்லை என்று நம்பப்பட்ட சுரங்கப் பாதைகளுக்குள் சென்றவர்களில் 35 சதவீதம் பேரும் மனிதர்களுக்குத் தொடர்பற்ற அமானுஷ்ய சக்தியை உணர்ந்தனர்.
“ஒளி மற்றும் ஒலியுடன் மக்களுக்கு சில அனுபவங்கள் கிடைத்துள்ளன” என்கிறார் வைஸ்மேன். ஆனால் அவை இந்த சுரங்கங்களில் நுழையும் ஒளி, அவற்றின் அமைப்பு, அங்குள்ள இருள், அத்துடன் அளவு, வெப்பநிலை, காற்றில் உள்ள துகள்களின் இயக்கம் மற்றும் காந்தப்புலம் ஆகியவற்றின் விளைவாகும்.”
தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் வெளிப்புற ஒளியிலிருந்து உள்ளே முழு இருளுக்கு வருகிறார்கள். அவர்களின் உணர்வு உறுப்புகள் சரியாக வேலை செய்யவில்லை. பின்னர் அவர்களுக்கு சில மாயத்தோற்றங்கள் ஏற்படுகின்றன. தெரியாத இடத்திற்கு, இருட்டில் சென்ற பிறகு மக்கள் அமைதியின்மை அடைகிறார்கள். அந்த உணர்வு இந்த அனுபவங்களிலிருந்து தான் வந்திருக்க வேண்டும்.”
பழைய எடின்பர்க் நகரத்தின் கீழ் இரகசிய நிலவறைகள் உள்ளன. அவை பெட்டகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சில பேய்கள் இங்கு நிரந்தரமாக வசிக்கின்றன. பேய்களைப் பற்றிப் பின்னர் பேசுவோம். ஆனால் முதலில் இந்த நிலவறைகளை யார் கட்டினார்கள், ஏன் கட்டினார்கள் என்று பார்ப்போம்.
இவை உண்மையில் சிறிய அறைகள். எடின்பரோவின் தெற்குப் பாலத்தின் 19 வளைவு அடிவாரங்கள் உள்ள பகுதியில் இந்த அறைகளை உருவாக்குகின்றன.
இந்த நிலவறைகளில் தான் பேய் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த பேய்கள் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளால் விரும்பப்பட வேண்டும். ஏனெனில் இந்த நிலவறைகளுக்கு சிறப்பு சுற்றுலாத் திட்டங்கள் உள்ளன. இங்கே வழிகாட்டிகள் இரவில் பயணிகளை அழைத்துச் செல்கிறார்கள். இதற்கு 20-25 பவுண்டுகள் செலவாகும்.

பட மூலாதாரம், BLAIR STREET VAULTS
எடின்பர்க் ‘வால்ட்டுகளுக்கு‘ ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
அந்த அறைகள் எங்கள் மாளிகைகளின் அடித்தள அறைகளிலிருந்து வேறுபடாமல் இருப்பதைக் கண்டேன். நான் பயத்தை உணரவில்லை அல்லது எந்த பேயும் அங்கே இருக்கவில்லை.
இருட்டாக இருந்தாலும் இன்னும் குளிராக இருக்கிறது. ஆம், நான் விரும்பிய ஒரே விஷயம் அது மிகவும் சுத்தமாக இருந்தது. எடின்பர்க் முனிசிபல் கார்ப்பரேஷன் இதற்காக சிறப்பு நபர்களை நியமித்துள்ளது.
அவர்களில் ஜேமி கோர்ஸ்டோஃபினும் ஒருவர். இந்த செல்களில் நள்ளிரவு முதல் விடியற்காலை வரை பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.
இங்கு வேலை செய்ய அவர்கள் பயப்படவில்லையா? இதற்கு பிபிசிக்கு பதிலளித்த அவர், “ஒரு துளி தண்ணீர், மற்றொரு பொருள், உங்கள் சொந்த குரல் ஓசைகள் மற்றும் இருட்டு அறையில் தோன்றும் வித்தியாசமான நிழல்கள் தான் உங்களுடன் விளையாடுகின்றன. வேறு எதுவும் இல்லை,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் இங்கு வேலை செய்யத் தொடங்கியபோது, இந்த ஒலிகள் ஏதோ மனித சக்திக்குத் தொடர்பற்றவை போல் இருந்தன என்று நான் பயந்தேன். பின்னர் இங்குள்ள அமைப்பு அத்தகைய ஒலிகளை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தேன். ஆனால் இரவின் கரும் இருளிலும், ஒரு சத்தம் கேட்டது, அது திடுக்கிட வைத்தது.”
ஒருமுறை பயந்து வீட்டுக்குப் போய்விட்டதாகவும் ஒரு கதையை அந்த தொழிலாளர்கள் சொல்கிறார்கள்.

ஜேமி கோர்ஸ்டோபின் நிலத்தடி ‘வால்ட்டுகளைப்’ பராமரித்து பழுதுபார்த்து வருகிறார்.
“நான் இரவில் வேலை செய்து கொண்டிருந்தேன். திடீரென்று குழந்தைகள் சிரிப்பதைக் கேட்டேன். அப்போது இரவு மூன்றரை மணி. இவ்வளவு இரவு நேரமாக இங்கே எந்த குழந்தைகள் இருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே நிலவறையின் வாசலுக்குச் சென்றேன். யாரையும் காணவில்லை. தெருவில் வெளியே யாரும் இல்லை. ஆனால் பின்னர் தான் எனக்கு பயம் ஏற்பட்டது. நான் என் ஷிப்ட் முடிவதற்குள் வெளியே வந்து, ஒரு டாக்ஸி பிடித்து நேராக வீட்டிற்குச் சென்றேன்.”
இந்த நிலத்தடி அறைகளில் பேய்கள் எங்கிருந்து வந்தன என்பதை அறிவதற்கு முன், இந்த நிலத்தடி அறைகளின் வரலாற்றை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, எடின்பரோவின் தெற்கு பாலத்தின் 19 வளைவுகள் காரணமாக இந்த பெட்டகங்கள் உருவாகின்றன. அலமாரி வடிவில் சுமார் 120 சிறிய அறைகள் உள்ளன.
எடின்பர்க் நகரம் 7 பெரிய மலைகளில் அமைந்துள்ளது. ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல இந்த மலைகளில் ஏறி இறங்க வேண்டும். எனவே, நகரின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் பாலம் அமைத்து, அதன் வளைவுகளை தரையில் பதித்து, பணியை துவக்க வேண்டும் என, யோசனை தெரிவிக்கப்பட்டது.
தெற்கு பாலம் 1788 இல் முடிக்கப்பட்டது. ஆனால் அப்போதிருந்து இந்த பாலம் பற்றி பல்வேறு புராணக்கதைகள் பரவ ஆரம்பித்தன.
இங்குள்ள ஒரு நீதிபதியின் மனைவி முதன்முறையாக பாலத்தைக் கடந்து சென்ற பின் விரைவில் இறந்தார். அப்போது பாலம் கட்டி முடிக்கப்படவில்லை. இந்த பாலம் திறக்கப்பட்ட நாளில், அவரது இறுதி ஊர்வலம் இந்த பாலத்தின் வழியாக சென்றது.
இதனால் மக்கள் அச்சமடைந்து இந்த பாலத்தை பயன்படுத்துவதை நிறுத்தினர்.
ஆனால் இந்த இடம் ஒரு உத்திரீதியான இடமாக இருந்தது. அப்போது பல கடைக்காரர்கள் இந்த பாலத்தின் கீழ் தங்கள் கடைகளை அமைத்தனர். இங்கு இருட்டாக இருந்ததால், தொடர்ந்து தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. இதனால் 30 ஆண்டுகளில் இந்த இடம் அசுத்தமாகி, இங்குள்ள கடைகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தன.

பட மூலாதாரம், Getty Images
இந்த அறைகள் தெற்கு பாலத்தின் வளைவுகளின் கீழ் உருவாக்கப்பட்டன.
1800 க்குப் பிறகு, வணிகர்கள் இங்கு குடியேறினர். இருளில் இருந்து அவர்கள் பயனடைந்தனர். சூதாட்டமும் பாலியல் தொழிலும் இங்குதான் தொடங்கின. 1850 ஆம் ஆண்டில் அயர்லாந்தில் ஒரு பயங்கரமான பஞ்சம் ஏற்பட்டது. அங்கிருந்து பல அகதிகள் உணவு தேடி எடின்பர்க் வந்தனர். தங்குவதற்கு இடம் இல்லாததால் இந்த அறைகளில் குடியேறினர். இங்கு ஒரு சேரி உருவாக்கப்பட்டது.
இருட்டாக உள்ள இடம், சுத்தமான காற்று இல்லை, தண்ணீர் தொடர்ந்து கசிந்து வருவதால், இங்கு நோய் பரவியது.
இங்கு இறந்தவர்களின் உடல்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. சிலர் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து மருத்துவ படிப்பிற்காக எடின்பர்க் பல்கலைக் கழகத்திற்கு விற்றனர்.
பர்க் மற்றும் ஹரே என்ற இரண்டு தொடர் கொலைகாரர்கள் இங்கு தங்களுடைய இருப்பிடத்தை அமைத்திருந்தனர். இந்த நபர்கள் எடின்பர்க் பல்கலைக் கழகத்திற்கு உடலை விற்று வந்தனர். அப்போது மருத்துவ படிப்புக்கு இறந்த உடல்கள் கிடைக்காததால் கேள்வி கேட்காமல் இறந்தவர்களின் உடல்களை வாங்கியுள்ளனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து 16 கொலைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உடல்களை மறைக்கும் 2 இடங்களையும் சுற்றுலாப் பயணிகளின் பயணம் காட்டுகிறது.
இங்கு இறந்த அல்லது கொல்லப்பட்டவர்களின் பேய்கள் இந்த பெட்டகங்களில் உலவுவதாக கூறப்படுகிறது.
இந்த பேய்களில் சில நிரந்தர குடியிருப்பாளர்களாகவும் உள்ளன.
இதில் ஒரு பேய் மிஸ்டர் பூட்ஸ். அதன் கனமான காலணிகளின் சத்தம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். இது தொழிலாளர்கள் எடுத்த புகைப்படங்களில் காணப்படுவதாகவும் பலர் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இன்னொருவர் பிரபு. அது ஒரு பணக்கார உம்ராவின் பேய். அது சுவருக்கு எதிராக நின்று வழிப்போக்கர்களைப் பார்த்து புன்னகைக்கும். இது ஒரு பாதிப்பில்லாத பேய்.
மற்றொன்று செருப்பு தைக்கும் தொழிலாளியின் பேய். இது ஒரு கொழுத்த பேய் மற்றும் அந்த பேய் ஒரு பெரிய கவசத்தை அணிந்துள்ளது.
ஜாக் என்ற பேயும் இங்கே இருக்கிறது. சுருள் பொன்னிற முடி கொண்ட ஆறு ஏழு வயது சிறுவனின் பேய் அது. அது நீல நிற பேன்ட் அணிந்திருக்கும். இந்த பேய் சிறு குழந்தைகள் மற்றும் பெண்களை பின்தொடர்ந்து செல்லும். சில சமயங்களில் ஒருவரின் விரலைப் பிடித்துக்கொண்டு நடப்பதாகவும் பலர் கூறுகின்றனர்.
இந்த பேய்கள் எதையும் நான் பார்க்கவில்லை. இந்தியர்களின் பார்வையில் சொன்னால், ‘செலவு செய்த பணம் வீணாகி விட்டது’ என்ற உணர்வு என் மனதில் புகுந்தது.
ஒவ்வொரு ஆண்டும் 3.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் எடின்பர்க் வருகிறார்கள். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. லண்டனுக்குப் பிறகு, இந்த நகரம் இங்கிலாந்தில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.
இங்குள்ள பேய்களின் புனைவுக் கதைகள் மற்றும் பயங்கரங்கள் மேலும் மேலும் மக்களை ஈர்க்கின்றன.
வலியும் துன்பமும் சந்தைப்படுத்தப்பட்டு திகில் சுற்றுலா மேம்படுத்தப்படுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஒவ்வொரு ஆண்டும் 35 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எடின்பர்க் வருகை தருகின்றனர்.
பிபிசியிடம் பேசிய கிளாஸ்கோ பிசினஸ் ஸ்கூலின் துணை டீன் பேராசிரியர் லெனான், “வலியும் பயமும் விற்கப்படும் இடத்தில் சுற்றுலா செழிக்கிறது. இது மனித மனதின் இருண்ட போக்கை பாதிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் மரணத்தைப் பார்த்திருக்கிறான், அனுபவித்திருக்கிறான், அதனால் மரணத்திற்குப் பின் உலகத்தால் கவரப்படுகிறான்,” என்றார்.
எடின்பர்க் கோட்டைக்கு செல்ல விரும்பினால், நீங்கள் ஒரு டிக்கெட் எடுக்க வேண்டும். நீங்கள் பெட்டகங்களை சுற்றி பார்க்க விரும்பினால், பணம் செலவழிக்க வேண்டும். அங்கே சாப்பிட்டு, குடிக்க வேண்டும். அதற்கும் பணம் செலவாகும். எனவே பேய் கதைகளை கேட்கும் போது நமது பணப்பை எப்போது காலியாகும் என்று தெரியவில்லை.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்