2029, 2034-ல் தான் வரும் என்று கூறுகிறார்கள். ஆனால். 2024-க்கு பிறகு மோடி ஆட்சியே இருக்காது. பெண்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. மேலும் இந்த சட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும், சிறுபான்மையின பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கவில்லை. அப்படி வழங்கினால்தான் அவர்களின் குரல் நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் ஒலிக்கும். ஆனால், அது ஒலிக்கக் கூடாது என்று தான் பாஜக நினைக்கிறது. இது பாஜக-வின் அரசியல் சதி. இதை சுட்டிக் காட்டினால் பெண்களை சாதி ரீதியாக பிளவுபடுத்துகிறோம் என்று மோடி அள்ளிவிடுகிறார்.


இடஒதுக்கீடு கேட்பது என்பது சாதி ரீதியாக பிரிப்பதற்கு அல்ல, அனைத்து மகளிரும் எல்லா விதமான உரிமைகளையும் பெற வேண்டும் என்பதற்காகத்தான். இதை விட்டுக் கொடுத்தால் அடுத்தடுத்து சமூக நீதியை காவு வாங்கி விடுவார்கள். எந்த சூழ்நிலையிலும் சமூக நீதியை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது. சமூக நீதியின் குரலைத்தான் ராகுல் காந்தி தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறார். இந்தியா கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணி அல்ல கொள்கை கூட்டணி. சமூக நீதி, மதசார்பின்மை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி கருத்தியல் என்ற கோட்பாடுகளைக் கொண்டதாக இந்த கூட்டணி அமைந்திருக்கிறது.


இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலம் மகளிருக்கான உரிமை மட்டுமல்ல, அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். இந்தியா முழுமைக்கும் பரவும் மகளிர் உரிமை பெற்ற நாள் நிச்சயம் அமையும். அதற்கான அடித்தளத்தை உருவாக்கக்கூடிய இந்த மாநாட்டை நடத்தி காட்டிய என் அருமை தங்கை கனிமொழிக்கும், அவருக்கு துணை நின்ற மகளிரணிக்கும் வாழ்த்துக்கள். இந்தியா வாழ்க, இந்தியா கூட்டணி வெல்க.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com