`நாங்கள் வைக்கும் கோரிக்கைகள் மக்களுக்கானவை, அரசியல்

அதனைத் தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற விரிவாக்கம் செய்யப்பட்ட விமான முனையம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், “நெடுஞ்சாலைத்துறையை மேம்படுத்துவதோடு சுங்கவரியை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும். திருச்சி பி.ஹெச்.எல் நிறுவனத்தை நம்பி இருந்த எம்.எஸ்.எம்.இ தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து உள்ளன. இதனை கருத்தில் கொண்டு பிரதமர் பி.ஹெச்.எல் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் எம்.எஸ்.எம்.இ தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள். நெல்லை, தூத்துகுடியில் ஏற்பட்ட பேரிடரை தேசிய பேரிடராகக் கருதி, மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மெட்ரோ ரயில் திட்டம் தொகுதி – 2 (பேஸ்- 2) நிதியை விரைந்து வழங்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. தொட்ட துறைகள் அனைத்திலும் தமிழ்நாடு சிகரத்தை தொட்டு வருகிறது. விமான நிலையங்களை விரிவாக்கம், மற்றும் நவீனபடுத்த தமிழ்நாடு அரசு நிலம் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விமான நிலையத்தை விரைவில் விரிவாக்கம் செய்ய வேண்டும். தென் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் ஆன்மிகப் பயணமாக வருகிறார்கள்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்
தே.தீட்ஷித்

அதே போன்று, வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாவிற்காகவும் அங்கு வருகிறார்கள். அவர்கள் வந்துசெல்ல ஏதுவாக மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் வைத்த கோரிக்கையை, பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டும். சென்னை – பினாங்கு, சென்னை- டோக்கியோ நகரங்களுக்கு நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும். சமீபத்தில் தென் மாவட்டங்களில் வெள்ளம், அதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை பிரதமர் மோடி அறிந்ததுதான். அந்த வெள்ளத்தால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனை இயற்கை பேரிடராக கருதி, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டிய கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பிரதமர் உதவுவார் என நம்புகிறேன். மாநிலத்துக்காக கோரிக்கை வைப்பதும், மாநில உரிமைகளை நிலைநாட்டுவதும் அங்கு வாழும் மக்களின் கோரிக்கைகள்தானே தவிர, அரசியல் முழக்கம் இல்லை” என்றார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *