மக்களே…! இனி‌ அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம்….! முதலமைச்சர் சூப்பரான அறிவிப்பு…!

மக்களே…! இனி‌ அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம்….! முதலமைச்சர் சூப்பரான அறிவிப்பு…!

கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதாக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதாக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. 68வது கன்னட ராஜ்யோத்சவா கொண்டாட்டத்தில் பேசிய முதல்வர் சித்தராமையா, கன்னட நடுத்தர பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே போட்டித் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தது மட்டுமின்றி, இதுபோன்ற தேர்வுகளை கன்னடத்திலும் நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத தயாராக உள்ளதாக கூறினார்.

கர்நாடகாவில் கன்னடம் பேசாத பலர் வாழ்கின்றனர். மாநிலத்தில் “நிர்வாக மொழி கன்னடம். எனவே, கன்னடத்திலேயே தொடர்பு கொள்ள வேண்டும். அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும் என்றாலும், கர்நாடகாவில் கன்னடத்தைப் பயன்படுத்த வேண்டும். இதை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்,” என்றார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *