திரிணமூல் காங்கிரஸ் எம்.பி-யான குணால் கோஷ், ‘மேற்கு வங்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியாகத் தெரிவித்துவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே இதுபோன்ற பொய் வாக்குறுதிகளை அளித்து அரசியல் ஆதாயமடைய பா.ஜ.க-வினர் முயல்கின்றனர்’ என்று விமர்சித்திருக்கிறார்.


‘குடியுரிமை விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்காக பா.ஜ.க பயன்படுத்துகிறது’ என்று மம்தா பானர்ஜி சமீபத்தில் சாடியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்த மண்ணின் சட்டம். அதை அமல்படுத்துவது தவிர்க்க முடியாதது. மம்தா பானர்ஜி, மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்’ என்று கூறினார். அதற்கு ஒரு மாதத்துக்குப் பிறகு, சி.ஏ.ஏ விரைவில் அமல்படுத்தப்படும் என்று தற்போது கூறியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர்.
நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. இந்த முறையும் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க விரும்புகிறது. எனவே, வெற்றிக்கான அனைத்து ஆயுதங்களையும் பா.ஜ.க பயன்படுத்தவே செய்யும். அந்த வகையில், தேர்தலுக்கு முன்பாக சி.ஏ.ஏ-வை அமல்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com