இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “மிக்ஜாம் புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. சேதத்தின் அளவு வேறுபட்டாலும், இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வளர்ந்த பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் பங்கான ரூ.493.60 கோடி ஆந்திராவுக்கும், ரூ.450 கோடி தமிழ்நாட்டுக்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார்.


இரு மாநிலங்களுக்கும் முதல் தவணையை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியிருந்தது. பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த முக்கியமான நேரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறோம், விரைவில் நிலைமை சீரடைவதை உறுதி செய்வோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றொரு பதிவில், “கடந்த எட்டு ஆண்டுகளில் மூன்றாவது பெரிய வெள்ளத்தைச் சென்னை எதிர்கொண்டிருக்கிறது. பெருநகரங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை நாம் அதிகம் பார்க்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, நகர்ப்புற வெள்ளத் தடுப்பு திட்டத்திற்கு, தேசிய பேரிடர் தடுப்பு நிதியத்தின் (NDMF) கீழ், ‘சென்னை பேசின் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு’ ரூ.561.29 கோடி, ஒதுக்கப்படுகிறது.
இந்த திட்டம் சென்னையை வெள்ளத்தைத் தாங்கக்கூடியதாக மாற்ற உதவும். நகர்ப்புற வெள்ளத் தடுப்பு முயற்சிகளில் இது முதன்மையானது மற்றும் நகர்ப்புற வெள்ள மேலாண்மைக்கான பரந்த கட்டமைப்பை உருவாக்க உதவும்” எனக் குறிப்பிட்டுள்ளார் அமித் ஷா.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com