மேலும், “திரைத்துறையில் இருக்கும் ஒருவரை பல இளைஞர்கள் தங்களது ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொது வெளியில் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்ளலாமா?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, பொது வெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துமாறு, அவரின் வழக்கறிஞர் குரு தனஞ்ஜெயிடம், நீதிபதி கூறினார். மன்சூர் அலிகான், தொடர்ச்சியாக இது போன்ற சர்ச்சையான செயல்களில் ஈடுபடுவதாகக் கூறிய நீதிபதி, “எதற்காக அவர் ஊடகங்களைச் சந்திக்கிறார்… அவருக்கு வேறு பணி இல்லையா… தான் எந்த தவறும் செய்யவில்லை என தற்போது மன்சூர் அலிகான் கூறுகிறார். கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காகவா நிபந்தனையாற்ற மன்னிப்புக் கோரினார்?” எனவும் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞர், “மன்சூர் அலிகான் பேசியது தொடர்பாக முழு வீடியோவையும் தாக்கல் செய்கிறோம். மன்சூர் அலிகானைப் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை த்ரிஷா நீக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
நடிகை த்ரிஷா தரப்பில் வழக்கறிஞர் கே.வி.பாபு ஆஜராகி, “மன்சூர் அலிகான் மன்னிப்புக் கேட்ட நிலையில், இந்த விவகாரம் முடிந்துவிட்டது. இதில் பாதிக்கப்பட்ட த்ரிஷாவே அமைதியாக உள்ள நிலையில், தற்போது எதற்காக மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்திருக்கிறார் எனத் தெரியவில்லை?” எனக் கூறினார்.
இதையடுத்து, மன்சூர் அலிகானின் மனு குறித்து நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை டிசம்பர் 22-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com