ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு இயற்றிய `தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டுகள் தடை மற்றும் விளையாட்டுகள் ஒழுங்குபடுத்துதல்” சட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், `இத்தகையச் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாகக் கருத முடியாது’ என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.


அதேபோல, `சட்டம் கொண்டுவர தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது’ என தமிழக அரசுத் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
செப்டம்பர் 13-ம் தேதி, அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது நீதிமன்றம்.
நன்றி
Publisher: www.vikatan.com