2022-ம் ஆண்டு, ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,296.88 கோடி ரூபாய் செலவில் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தரமற்ற பொருள்களை விநியோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும், திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயகோபி என்பவர் லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் மனு, தாக்கல் செய்திருந்தார்.
இந்தப் புகாரை நிராகரித்து, லோக் ஆயுக்தா 2022 மார்ச் 2-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜெயகோபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், `அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பிலிருந்த வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருள்கள் தரமற்றவையாக இருந்தன. அவற்றில் உயிரிழந்த பூச்சிகள் காணப்பட்டன.


நன்றி
Publisher: www.vikatan.com