மிக்ஜாம் புயல் நிவாரணம்: யாருக்கு, எப்போ, எப்படி?! –

மிக்ஜாம் புயலால் சென்னை 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைப் பொழிவைச் சந்தித்திருக்கிறது என்கிறது தமிழக அரசு. அந்த பாதிப்பிலிருந்து சென்னை தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுக் கொண்டிருக்கிறது. வட சென்னையின் பல்வேறு பகுதிகள் இன்னும் மீண்டுகொண்டுதான் இருக்கின்றன. வழக்கத்தைவிட இந்த முறை பாதிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் மக்களும் அதிகம். புயலை ஏற்கெனவே கணித்த அரசு, அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தாலும் போதிய அளவு அது இல்லை என்பதே பெரும்பாலான மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

பெரும்பாலான இடங்களுக்கு உதவிகள் மிகவும் தாமதமாகச் சென்றதும் மக்களைக் கொதிப்படையச் செய்தது. இதனால், மக்களைச் சந்திக்கச் சென்ற எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களை மக்கள் ஆங்காங்கே முற்றுகையிடுவதும் நிகழ்ந்தது. ஏற்கெனவே, வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை உடனடியாகக் கிடைக்க நிறுவனங்களுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தவும் அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்து வருகிறது. அரசு தரப்பில் இதற்கான முன்னேற்பாடுகள் ஏதும் நடக்கின்றனவா என்ற விசாரணையில் இறங்கினோம்.

முதல்வர் ஸ்டாலின்

“நிவாரணம் கொடுப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிவாரணம் பெரும்பாலும் நிதியாகவே இருக்கும். பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டத்துக்கும் உரிய நிவாரணம் விரைவில் அறிவிக்கப்படும். பெரும்பாலும் அனைவருக்குமான நிவாரணமாகவே இருக்கும். பலரும் தங்கள் கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை இழந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கணக்கெடுத்து உடனடியாக நிவாரணம் கிடைக்கவும் அதற்காக அமைச்சர்கள், அதிகாரிகளை நியமிக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. முதல்வர் இதை நேரடியாகக் கண்காணிப்பார்” என்றனர். விரைவில் நிவாரணம் அறிவித்து மக்களை இந்த இடரிலிருந்து அரசு மீட்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான்.

இதனிடையே, மழை வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது, நிவாரண பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நிவாரண நிதி உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *