இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்களின் படி தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம். பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்கலாம். மேலும், அமைதியான மண்டலங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், மத ஸ்தலங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பிற முக்கிய இடங்களில் பட்டாசுகளை வெடித்தல் சட்டத்தால் தடை செய்யப்பட்டது மற்றும் சட்டத்தின் படி தண்டனைக்குரியது ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் நெகிழி கழிவுகள் மேலாண்மை விதிகளின் படி பட்டாசு குப்பைகளை மற்ற எந்த குப்பைகளுடனும் கலக்காமல் தினம்தோறும் வகைப்படுத்திய குப்பையை பெற வரும் மாநகராட்சி தூய்மை பணியாளரிடம் தனியாக ஒப்படைக்கவும்.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com