இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்-ஸைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், “சம்பந்தப் பட்ட நான்கு வார்டுகளிலுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நான்கு வார்டு கவுன்சிலர்களின் மரணத்தையடுத்து காலியான பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்தும் மாநகராட்சி மாமன்றச் செயலாளர் சார்பில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறோம். இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு, தேதி குறித்து மாநில தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும். அதிகாரபூர்வமாகத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளியாகும்போது, இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் சென்னை மாநகராட்சி வழங்கும்” எனத் தெரிவித்தார்.


`சென்னை மாநகராட்சிக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் காலியாக இருக்கும் கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஒட்டுமொத்தமாக இடைத்தேர்தல் நடத்த, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தத் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும்’ என்கிறது தேர்தல் ஆணைய வட்டாரம்.
மக்களவைத் தேர்தலுக்கு ஆர்வம் காட்டும் ஆளுங்கட்சி, உள்ளாட்சி இடைத்தேர்தலையும் உடனே நடத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com