தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள், நகர் நல அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது. மறுஉத்தரவு வரும் வரை டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்களை நடத்தவேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், டெங்கு காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டிருப்பதோடு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகள், தனியார் ஆய்வகங்கள் போன்றவை டெங்கு காய்ச்சல் விவரங்களை சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறது. அவர்கள் தகவல் அளிக்கத் தவறும்பட்சத்தில், தொற்று நோய்த் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.


சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரையில், தற்போது கொசு ஒழிப்பு பணிக்கென 954 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்களும், 2,324 ஒப்பந்தப் பணியாளர்களும் என மொத்தம் 3,278 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மருந்து தெளிப்பான்கள், பவர் ஸ்ப்ரேயர்கள், புகைப்பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் உள்ளிட்ட தடுப்பு உபகரணங்கள் மூலம் கொசுப்புழுக்கள் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com