இதையடுத்து, ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. வரும் 22-ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்படுவார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. ஆனாலும், உடல் நிலையை காரணம் காட்டி ஒரு மனுவும், வீட்டிலேயே இருப்பதாக ஒரு மனுவும் என இரண்டு மனுக்கள் சந்திரபாபு நாயுடு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முதற்கட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் சிறை செல்வது உறுதியாகியிருக்கிறது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு, ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நன்றி
Publisher: www.vikatan.com
