ராஜ்காட் கோட்டை: சத்ரபதி சிவாஜி ரகசிய பொக்கிஷங்களால் கட்டிய பாதுகாப்பு அரண் அவுரங்கசீப்பிடம் சிக்கியது எப்படி?

ராஜ்காட் கோட்டை: சத்ரபதி சிவாஜி ரகசிய பொக்கிஷங்களால் கட்டிய பாதுகாப்பு அரண் அவுரங்கசீப்பிடம் சிக்கியது எப்படி?

ராஜ்காட் கோட்டை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மகாராஷ்டிரவில் உள்ள ராஜ்காட் கோட்டை இன்றளவும் மலையேற்றப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும் இடமாகவே திகழ்கிறது.

ராய்காட் கோட்டைக்கு முன்பு, சிவாஜி மகாராஜா புனே மாவட்டத்தில் உள்ள ராஜ்காட்டை தனது அரசியல் மையமாகத் தேர்ந்தெடுத்திருந்தார். அவர் ராஜ்காட்டில் 25 ஆண்டுகளுக்குக் குறையாமல் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

“ராஜ்காட்டின் பெரிய உயரத்தைப் பார்த்தால், இது எல்லா கோட்டைகளிலும் மிகப் பெரியது எனத் தெரியவரும். இதன் சுற்றளவு 39 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். ராஜ்காட்டின் வலிமையையும் உயரத்தையும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இந்த மலை, பள்ளத்தாக்குகள் மற்றும் அடர்ந்த காடுகள் வழியாக காற்றைத் தவிர வேறு எதுவும் செல்ல முடியாது. இங்கே மழை மட்டுமே சுதந்திரமாகப் பரவமுடியும்.”

பதினேழாம் நூற்றாண்டில் மன்னர் சிவாஜியின் முதல் தலைநகராக ராஜ்காட்டை அவுரங்கசீப்பின் தளபதிகளில் ஒருவரான சாகி முஸ்தைத் கான் கூறுகிறார்.

இயற்கையாகவே, சுமார் 40 கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த ராஜ்காட்டை முற்றுகையிடுவது எளிதல்ல.

சாகி முஸ்தைத் கான் பாரசீக மொழியில் எழுதிய ‘மசிரே ஆலம்கிரி’யில் ஔரங்கசீப் தெற்கு நோக்கி தனது படைகளை நடத்திச் சென்ற போது முஸ்தைத் கானும் உடன் சென்றார். அப்போது கோட்டைகளை முற்றுகையிட்டதற்கான விளக்கத்தை ஒரு புத்தகத்தில் அவர் எழுதியதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

“கோட்டையின் அரண்களை சிவாஜி பலப்படுத்தியிருந்தார். இந்த கடற்கரைக்கு கீழே பயங்கரமான பள்ளத்தாக்குகளில், மிகவும் கடினமான பாதைகள் உள்ளன. அவற்றை மக்கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள இந்தக் கோட்டையைக் கட்டுவதற்கு அதிக காலம் எடுத்துக்கொண்டது சிவாஜியின் பல வியத்தகு செயல்களுக்கு சாட்சியாக உள்ளது. கோட்டையைப் பலப்படுத்தியது மட்டுமின்றி அடிவாரத்திற்கு அருகிலுள்ள காடுகளைப் பராமரித்தது போன்ற உத்திகள் கோட்டையின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று கருதப்படுகிறது.

முகலாய வரலாற்றாசிரியர் முஹம்மது ஹாஷிம் என்கிற காஃபிகான் 1732 இல் முந்த்காப்-அல்-லபாப்-இ-முஹம்மத்ஷாஹி என்ற புத்தகத்தில் கோட்டையைப் பற்றி விவரித்துள்ளார்.

“ராஜ்காட் கோட்டை உண்மையில் ஒரு மலைத்தொடர். எல்லா பக்கங்களிலிருந்தும் அந்தக் கோட்டையைச் சுற்றி வளைப்பது கடினமாக இருந்தது.”

இந்த விளக்கங்களிலிருந்து, முகலாய ராணுவம் ராஜ்காட் மீது பயந்தது என்பது உறுதியாகிறது.

இன்றும், ஒருவர் ராஜ்காட்டை அடைய விரும்பினால், கரடுமுரடான பாதை மற்றும் கடினமான மலையேற்றத்தைத் தவிர வேறு வழியில்லை.

ராஜ்காட் கோட்டை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ராஜ்காட் கோட்டை புனே மாவட்டத்தில் உள்ள வேல்ஹே தாலுகாவில் அமைந்துள்ளது.

ராஜ்காட் கோட்டை எப்படி கட்டப்பட்டது?

ராஜ்காட் கோட்டை புனே மாவட்டத்தில் உள்ள வேல்ஹே தாலுகாவில் அமைந்துள்ளது. புனேவில் இருந்து 50 கிலோமீட்டர் பயணம் செய்து ராஜ்காட்டை அடைய வேண்டும். அதற்காக கோட்டையின் அடிவாரத்திற்கு அருகில் உள்ள குஞ்ச்வானே மற்றும் பாலி கிராமங்களுக்கு செல்லலாம்.

கோட்டைக்கு இரண்டு முக்கிய வாயில்கள் உள்ளன. பாலி தர்வாசா முக்கிய வாயில், குஞ்ச்வானே முந்தைய வாயில். அடிவாரத்தில் இருந்து பத்மாவதி மச்சிவாரை (கண்காணிப்பு கோபுரம்) அடைய சுமார் இரண்டரை முதல் நான்கரை மணி நேரம் ஆகும். ஆனால் வெவ்வேறு 8-10 பாதைகளைக் கடந்து தான் ராஜ்காட் கோட்டையை அடையமுடியும் என்ற தகவல் ஆச்சரியமளிக்கும்.

ராஜ்காட் கோட்டையின் சிறப்பான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் டோகர்ரங்கா மற்றும் மச்சியுடன் இணைக்கப்பட்ட கோட்டையின் மிகப்பெரிய அமைப்பாகும். சுவேலா மச்சிவார் மற்றும் சஞ்சீவனி மச்சிவார் (கண்காணிப்பு கோபுரம்) ஆகிய பகுதிகள் ஒவ்வொன்றும் இரண்டரை கிலோமீட்டர்கள் மற்றும் 3 கட்டங்களாக கட்டப்பட்டுள்ளன. பீடபூமியில் அமைந்துள்ள பத்மாவதி மச்சிவாரில், அம்மன் கோயில் மற்றும் இடைக்கால கட்டிடக்கலையின் தடயங்கள் இன்னும் உள்ளன. மேலும் இந்த மூன்று கோபுரங்களுக்கு நடுவில் உள்ள மிக உயரமான கோட்டையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

ராஜ்காட் கோட்டையை ஒரே நாளில் பார்க்க முடியாது. குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் மற்றும் அதிகபட்சம் எட்டு நாட்கள் இருந்தால் தான் கோட்டையை முழுமையாகப் பார்வையிடமுடியும்.

சத்ரபதி சிவாஜி மன்னர் எப்படி மூன்று கண்காணிப்புக் கோபுரங்கள் மற்றும் கோட்டையின் பாதுகாப்பு அரண்களை பாதுகாத்திருக்க முடியும் என்று நாம் ஆச்சரியமாக உள்ளது.

ராஜ்காட் கோட்டை பற்றிய தகவல்கள் சிவாஜி மன்னரின் காலத்திலிருந்தே தொடங்குகிறது. பஹாமனி ஆட்சியின் போது இந்த கோட்டையின் பெயர் முரும்தேவ் அல்லது முறும்பதேவ் என்று இருந்தது. இது பிரம்தேவ் மலை என்றும் அழைக்கப்படுகிறது.

பஹாமனிக்குப் பிறகு, கோட்டை நிஜாம்ஷாஹி முதல் அடில்ஷாஹி, மீண்டும் நிஜாம்ஷாஹி வசம் இருந்தது.

ராஜ்காட் கோட்டை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ராஜ்காட் கோட்டை பற்றிய தகவல்கள் சிவாஜி மன்னரின் காலத்திலிருந்து தான் தொடங்குகின்றன.

முறும்பதேவ் மலையைக் கைப்பற்றிய பிறகு, மன்னர் சிவாஜி அதை ஆற்றல் மிக்க கோட்டைகளால் பலப்படுத்தி அதற்கு ராஜ்காட் என்று பெயரிட்டார். தனது ராஜ்ஜியம் சுதந்திரமானது என்பதை எதிரிகளுக்குக் காட்டவே கோட்டைக்கு ராஜ்காட் என்று பெயரிட்டார். மேலும் இந்தக் கோட்டையில் தனது சொந்த தேவநாகரி எழுத்து நாணயங்களையும் அச்சிட்டார்.

இந்த மலையை சத்ரபதி தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம், மாவல் மாகாணத்தில் அதன் ஆதிக்கம் இருந்தது. புனேவின் மேற்கில் உள்ள பள்ளத்தாக்குகளில் பரவியிருக்கும் மாவல் மாகாணம், சஹ்யாத்ரி எனப்படும் மேற்கு தொடர்ச்சி மலைகளிடையே, அரசியல் நடவடிக்கைகளின் மையமாகத் திகழ்ந்தது. கிழக்கில் தக்காண பீடபூமியும் மேற்கில் கொங்கனக் கடற்கரையும் ராஜ்காட்டை நிர்வாகத்திற்கு வசதியான இடமாக மாற்றியது.

குஞ்சன் மாவல் பள்ளத்தாக்கில் உள்ள ராஜ்காட்டின் பத்மாவதி மச்சிவாரின் மீது நின்று பார்த்தால், டோர்னா, சிங்ககாட் மற்றும் புரந்தர் கோட்டைகள் கண்ணுக்குத் தெரியும். இவை மாவல் மாகாணத்தில் உள்ள முக்கியமான கோட்டைகள் ஆகும்.

ராஜ்காட் கோட்டை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தனது ராஜ்ஜியம் சுதந்திரமானது என்பதை எதிரிகளுக்குக் காட்டவே கோட்டைக்கு ராஜ்காட் என்று மன்னர் சிவாஜி பெயரிட்டார்.

மன்னர் சிவாஜி தனது மாநிலமான ‘ஸ்வராஜ்யத்தை’ நிறுவியபோது, ​​டோர்னா கோட்டையின் விரிவாக்கத்தைக் கண்டு ‘பிரசண்டகாட்’ என்ற பெயரை வழங்கினார்.

டோர்னா கோட்டையில் வேலை நடந்து கொண்டிருந்த போது, ​​விலைமதிப்பற்ற பொக்கிஷம் எடுக்கப்பட்டு, ராஜ்காட் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜ்காட் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்தது என்பது வரலாற்று ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறது.

ஆனால் சில அறிஞர்கள் 1642 முதல் 1662 வரை அதாவது இருபது ஆண்டுகள், ராஜ்காட் கோட்டையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன என்கின்றனர். இவ்வளவு நீண்ட காலத்திற்கு அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதே அந்தக் கோட்டையின் ஆற்றலைப் பறைசாற்றும் விதத்தில் உள்ளது. வரலாற்று தொகுப்பாளரும் அறிஞருமான அப்பா பராப்பின் கூற்றுப்படி, ராஜ்காட்டின் பழைய கோட்டைகளை இடிக்கும் போது கிடைத்த ரகசிய பொக்கிஷங்கள் இந்த கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

சிவாஜி ராஜே டோர்னாவில் இருந்து ராஜ்காட் நகருக்கு மாறிய ஆண்டு என துல்லியமான தகவல் எதுவுமே இல்லை. ஆனால் வரலாற்றில் உள்ள எழுத்துக்களை வைத்து வரலாற்றாசிரியர்கள் அந்த ஆண்டை மதிப்பிட்டுள்ளனர்.

1652 இல், ராஜ்காட்டில் சிவாஜி மகாராஜுக்கு முன் நில உரிமை குறித்து பல சர்ச்சைகளும் இருந்தன. இது பற்றிய கடிதங்கள் வரலாற்று ஆவணங்களில் உள்ளன.

ராஜ்காட் கோட்டை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோட்டையை கட்டி முடிக்கும் பணிகள் 20 ஆண்டுகள் வரை நடைபெற்றன.

மன்னர் சிவாஜி தனது மாநிலமான ‘ஸ்வராஜ்யத்தை’ நிறுவியபோது, ​​டோர்னா கோட்டையின் விரிவாக்கத்தைக் கண்டு ‘பிரசண்டகாட்’ என்ற பெயரை வழங்கினார்.

டோர்னா கோட்டையில் வேலை நடந்து கொண்டிருந்த போது, ​​விலைமதிப்பற்ற பொக்கிஷம் எடுக்கப்பட்டு, ராஜ்காட் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜ்காட் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்தது என்பது வரலாற்று ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறது.

ஆனால் சில அறிஞர்கள் 1642 முதல் 1662 வரை அதாவது இருபது ஆண்டுகள், ராஜ்காட் கோட்டையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன என்கின்றனர். இவ்வளவு நீண்ட காலத்திற்கு அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதே அந்தக் கோட்டையின் ஆற்றலைப் பறைசாற்றும் விதத்தில் உள்ளது. வரலாற்று தொகுப்பாளரும் அறிஞருமான அப்பா பராப்பின் கூற்றுப்படி, ராஜ்காட்டின் பழைய கோட்டைகளை இடிக்கும் போது கிடைத்த ரகசிய பொக்கிஷங்கள் இந்த கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

சிவாஜி ராஜே டோர்னாவில் இருந்து ராஜ்காட் நகருக்கு மாறிய ஆண்டு என துல்லியமான தகவல் எதுவுமே இல்லை. ஆனால் வரலாற்றில் உள்ள எழுத்துக்களை வைத்து வரலாற்றாசிரியர்கள் அந்த ஆண்டை மதிப்பிட்டுள்ளனர்.

1652 இல், ராஜ்காட்டில் சிவாஜி மகாராஜுக்கு முன் நில உரிமை குறித்து பல சர்ச்சைகளும் இருந்தன. இது பற்றிய கடிதங்கள் வரலாற்று ஆவணங்களில் உள்ளன.

அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில், ஷாஹிஸ்தே கான் 1660 இல் மாவல் பிராட்ஸ் மலைப்பகுதி மீது படையெடுத்தார். பாரசீக ஆதாரங்களின்படி, ஷாஹிஸ்டே கான் ராஜ்காட்டுக்கு அனுப்பிய படைகள் அருகிலுள்ள கிராமங்களை அழித்தன. ஆனால் ராஜ்காட்டைக் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. பின்னர், மூன்று ஆண்டுகளுக்குள், மன்னர் சிவாஜி லால் மஹாலைத் தாக்கி ஷாஹிஸ்தேகானுக்கு பாடம் கற்பித்தார்.

ஆனால் 1665 இல் முகலாய இராணுவத்துடனான போர் கோட்டை நிர்வாகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

ராஜ்காட் கோட்டை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

1665ல் மன்னர் சிவாஜி 23 கோட்டைகளை முகலாயர்களுக்கு அளிப்பதாக ஜெய்சிங் மன்னருடன் ஒப்பந்தம் நிறைவேற்றினார்.

வரலாற்றாசிரியர் பி.என். தேஷ்பாண்டேவின் கூற்றுபடி, “மன்னர் சிவாஜியின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் பயணம் செய்யும் போது,செய்யும் போது அனைத்து பிராந்தியங்களையும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கும் நுட்பத்தை மிர்சா ராஜா ஜெய்சிங் ஏற்றுக்கொண்டார். அதன்படி, தாவூத் கான் மற்றும் ரைசிங் ஆகிய இருவருடனும் ரோஹிடா மற்றும் ராஜ்காட் கோட்டைகளுக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர். ராஜ்காட் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களை எரித்து அவர்கள் ஒரு பயங்கரத்தை உருவாக்கினர். ஏப்ரல் 30, 1665 அன்று, முகலாய ராணுவம் ராஜ்காட் மீது அணிவகுப்பை நடத்தியது. ஆனால் முகலாயர்கள் கோட்டையிலிருந்து ஒரு மிகப்பெரிய பதிலடியால் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஜூன் 1665 இல், மன்னர் சிவாஜி தோல்வியை ஏற்றுக்கொண்டார் என்பதுடன், ஜெய்சிங்குடனான ஒப்பந்தத்தில் 23 கோட்டைகளை முகலாயர்களுக்கு விட்டுக்கொடுக்கவும் ஒப்புக்கொண்டார். மீதமிருந்த 12 கோட்டைகளை தனக்கென வைத்துக் கொண்டார். இந்த பன்னிரண்டு கோட்டைகளில் ராஜ்காட் மற்றும் டோர்னா கோட்டைகள் இரண்டும் அடங்கும்.

ராஜ்காட் கோட்டை
படக்குறிப்பு,

மன்னர் சிவாஜியின் முதல் தலைநகரான ராஜ்காட்டின் இருப்பு, கோட்டையின் கட்டிடக்கலை காரணமாக இன்றும் பிரமிக்க வைக்கிறது.

ராஜ்காட் கோட்டை என்பது வரலாற்றில் முக்கியமாக பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தது. அதில், சத்ரபதி சிவாஜியும், ராஜே சாம்பாஜியும் ஆக்ராவிலிருந்து தப்பிவந்தது, பன்ஹாலா முற்றுகையிலிருந்து தப்பிவந்தது, அப்சல்கான் கொல்லப்பட்டது, சிங்ககாட் மீதான வெற்றி போன்ற பல நிகழ்வுகள் நேரடியாக ராஜ்காட் கோட்டையுடன் தொடர்புடையவை.

“சத்ரபதி ராஜாராம் மன்னரும் ராஜ்காட்டில் பிறந்தவர் தான். அதனால் தான் அவருக்கு ராஜாராம் என்று பெயர் கிடைத்தது,” என்று பேராசிரியர். என். தேஷ்பாண்டே எழுதுகிறார்.

மன்னர் சிவாஜியின் முதல் தலைநகரான ராஜ்காட்டின் இருப்பு, கோட்டையின் கட்டிடக்கலை காரணமாக இன்றும் பிரமிக்க வைக்கிறது.

இத்தளத்தில் நிர்வாகப் பணிகள் நடைபெற்று வருவதால், பழைய கட்டடங்களின் இடிபாடுகள் இன்றும் உள்ளன. செயலகம், திவான்-ஏக்-ஆம், சதர், மோரோபந்த் பிங்கிள் சோனோபந்த் டபீர் போன்ற அதிகாரிகளின் குடியிருப்புகள் பத்மாவதி மச்சியில் இருந்தன.

பத்மாவதி கோயிலும் பார்க்கத் தகுந்த ஒரு இடமாகவே திகழ்கிறது, சில திருப்பணிகள் செய்யப்பட்டிருப்பதால், அந்த கோயிலை நன்றாகக் காணலாம். சாய்பாயின் சமாதியும் கோயிலுக்கு அருகில் உள்ளது.

ராஜ்காட் கோட்டை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ராஜ்காட் கோட்டையில் கண்களுக்கு விருந்தளிக்கும் பல இடங்கள் உள்ளன.

ராஜ்காட்டில் தங்கியிருக்கும் அறிஞர்கள் மற்றும் கோட்டை பிரியர்களுக்கு இந்த கோவில் புகலிடமாக உள்ளது. கோயிலுக்கு அருகில் பத்மாவதி ஏரி உள்ளது.

கோட்டையில் விழும் மழைநீரை பெரிய குளத்தில் தோண்டி சேமித்து வைக்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சோர்டிந்த்யா அல்லது சோர் தர்வாசாவும் என்ற மிகக்குறுகிய எதிரிகளை தவறாக வழிநடத்தும் வழகளும் இங்கு உள்ளன. அந்தக் காலத்தில் சேரிகளும் கழிவுநீர் அமைப்பும் எப்படி இருந்தது என்பதையும் பார்க்கலாம்.

பத்மாவதி மச்சிவாருக்குப் பிறகு சுவேலா மச்சிவார் கட்டப்பட்டது. இங்கு ஒரு நீர்நிலை, கவச அரண்கள், மற்றும் சரிவுகள் கொண்ட ஒரு கட்டமைப்பு உள்ளது.

இந்த மாடத்தின் மீது குஞ்சவானே கதவு ஹேமட்பந்தி பாணியில் கட்டப்பட்டுள்ளது. வெவ்வேறு ஆட்சிகளின் சிற்பங்களையும் அருகில் காணலாம்.

ராஜ்காட் கோட்டை

பட மூலாதாரம், JB VLOGS

படக்குறிப்பு,

பத்மாவதி மச்சிக்குப் பிறகு சுவேலா மச்சி கட்டப்பட்டது. இங்கு ஒரு நீர்நிலை, கவச அரண்கள், மற்றும் சரிவுகள் கொண்ட ஒரு கட்டமைப்பு உள்ளது.

மேலும் தொடர்ந்து பயணித்தால், போர் கோபுரம் தொடங்குகிறது. ராணுவத்துக்கு உதவ வலுவான போர் கோபுரம் தேவை. தண்ணீர் தொட்டிகள் இங்கு மற்றொரு அம்சமாக விளங்குகின்றன. அதிக உயரத்தில் வசிப்பவர்களுக்கு வற்றாத நீர் விநியோகத்தை உறுதிசெய்ய இது போன்ற வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ராஜ்காட் கோட்டை

பட மூலாதாரம், JB VLOGS

படக்குறிப்பு,

அதிக உயரத்தில் வசிப்பவர்களுக்கு வற்றாத நீர் விநியோகத்தை உறுதிசெய்ய இது போன்ற வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சுவேலா மச்சிவார் பாறையில் காற்றினால் ஏற்படும் ஒரு குறுக்கு விரிசல் உள்ளது. அது நேதா என்று அழைக்கப்படுகிறது. இந்த நேதா மலையேற்றப் பயணிகளுக்கு ஒரு சாகச இடமாகும். பேஷ்வா காலத்து விநாயகர் சிலை மற்றும் அருகில் உள்ள சாந்தாஜி சிலிம்பகர் நினைவிடம் ஆகியவை கோட்டை பிரியர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்.

வட்டமாக இருப்பதற்குப் பதிலாக குறுகலாக இருக்கும் காலேஸ்வரி கோபுரம் குறிப்பாக எப்போதும் நினைவில் நிற்கக்கூடியதாக உள்ளது.

செங்குத்தான மலையில் கோட்டைக்கு செல்லும் பாதை மிகவும் கடினமானது என்பதுடன், குறுகியதாகவும் இருக்கிறது. முன்பு பாறையில் செதுக்கப்பட்ட படிகள் இருந்தன. அந்த பாதையின் ஒரு பக்கத்தில் ஒரு பள்ளத்தாக்கு இருக்கிறது.

எனவே இங்கு ஏறும் போது இரண்டு கைகளையும் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் தொடர்ந்து பயணிக்கும் போது இன்னும் நல்ல நிலையில் இருக்கும் கோட்டை வாயிலுக்கு வரமுடியும்.

ராஜ்காட் கோட்டை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ராஜ்காட் கோட்டையின் உறுதியான கட்டுமானங்கள் அனைவருக்கும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்கின்றன.

இந்த மலைக்கோட்டையை பாதுகாப்பதற்காக அது பலப்படுத்தப்பட்டு, அதை அசைக்க முடியாததாக கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு உயரமான பகுதியில் இருந்தாலும், நீரை சேமித்து வைப்பதற்காக பாறையில் செதுக்கப்பட்ட பிறை வடிவ குளங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டியவை.

ராஜ்காட் கோட்டை

பட மூலாதாரம், JB VLOGS

படக்குறிப்பு,

உயரமான பகுதியில் இருந்தாலும், நீரை சேமித்து வைப்பதற்காக பாறையில் செதுக்கப்பட்ட பிறை வடிவ குளங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடங்களாக உள்ளன.

ஜனனி தேவி மற்றும் பிரம்மரிஷி கோவில்கள் தவிர, அங்கே ஒரு சந்தை இருந்ததற்கான ஆதாரங்கள் இங்கு இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கான உறுதியான ஆதாரம் இல்லை.

கோட்டையில் உள்ள பல கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. மேலும் நான்கு கட்டிடங்களில் ஒன்று மன்னர் சிவாஜியின் குடியிருப்பு என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.

கோட்டையில், ராணி தலாவ், திவான்-இ-காஸ், தானியக் களஞ்சியங்கள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன.

கடைசியாக சஞ்சீவனி மச்சியை மன்னர் சிவாஜி கட்டினார். கோட்டையில் ஒரு பெரிய போர்முனையும் கட்டப்பட்டது. மொட்டை மாடியில் உள்ள 19 கோபுரங்களில், 9 கோபுரங்கள் மண் கோபுரங்களுடன் சேர்க்கப்பட்டன.

அலு தர்வாசா வழியாக சஞ்சீவனி மச்சிக்கு செல்லும்போது, ​​எதிரே வளைந்து நெளிந்து செல்லும் அரண்களின் அற்புதமான காட்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமையும்.

ராஜ்காட் கோட்டை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அதிக உயரத்தில் மிகவும் சிரத்தை எடுத்து ராஜ்காட் கோடையின் ஒவ்வொரு பகுதியும் கட்டப்பட்டது.

கோபுரத்தின் அடியில் உள்ள கல் பல மணி நேரம் எடுத்து அகற்றப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோபுரத்தில் 360 டிகிரி சுடக்கூடிய சக்கர பீரங்கியை ஏற்றுவதற்கு போதுமான இடம் உள்ளது. திலர் கானும் மிர்சா ராஜா ஜெய்சிங்கும் ராஜ்காட்டைத் தாக்கியபோது, ​​சஞ்சீவனி மச்சியின் கவச அமைப்புகளும் பீரங்கியும் தாக்குதலை முறியடித்ததாக அப்பா பராப் கூறுகிறார்.

மராட்டியப் பேரரசின் தலைநகரம் ராஜ்காட்டிற்குப் பிறகு ராய்காட்டுக்கு மாற்றப்பட்டது. 1670-71 இல் மன்னர் சிவாஜி, ராய்காட் இருப்பிடத்தை நிர்ணயித்தாலும், ராஜ்காட்டின் புதிய கட்டுமானம் அல்லது பழுதுபார்ப்புப் பணிகளையும் அவர் மேற்கொண்டுவந்தார். ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அவர் ராஜ்காட்டுக்கு 10 பொற்காசுகளை அளித்ததாகத் தெரியவருகிறது.

சூரத்தை இரண்டாவது முறையாகக் கொள்ளையடிப்பது, ஆங்கிலோ-டச்சுக்காரர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு மற்றும் முகலாய இராணுவத்துடன் மோதல் போன்ற முக்கிய நிகழ்வுகள் இந்த காலகட்டத்தில் நடந்தன. இந் நிகழ்வுகளின் போது, ராய்காட்டைத் தலைநகராக்குவதில் மன்னரின் எண்ணம் தெளிவாகத் தெரிந்ததாக அப்பா பரப் கூறுகிறார்.

“மாநிலத்தை ஸ்திரப்படுத்த வேண்டுமானால், ஒரு சத்ரசிங்காசனின் தேவை கண்டிப்பாக உள்ளது என்பதை நம்பகமான முக்கிய நபர்கள் முன்வைத்தனர். பாரா மாவலில் உள்ள உள் சச்சரவுகள் அந்த நேரத்துக்குப் பொருத்தமானவையாக இருக்கவில்லை. இந்த மாவல் பகுதி முற்றிலும் விவசாயத்தை நம்பியிருந்தது. அதனால் தானிய உற்பத்திக்கு அப்பகுதி நல்ல வசதியாக இருந்தது.

ராஜ்காட் கோட்டை

பட மூலாதாரம், JB VLOGS

படக்குறிப்பு,

எல்லா திசைகளிலும் தாக்குதல் நடத்தும் விதத்தில் கோபுரம் கட்டப்பட்டது.

“மேற்கு தொடர்ச்சி மலையின் வடகிழக்கில் பல மலைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. இந்த பகுதிகளைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்ய ராய்காட்டில் சோதனைச் சாவடியின் தலைமை அலுவலகம் இருப்பதும் வசதியாக இருந்தது. ராய்கத்வார் சந்தையும் செயலகமும் அதற்கான வியூகரீதியிலான இடங்களாக இருந்தன. இங்குதான் சுங்க வரியால் அரசுக்கு அதிக பலன் கிடைத்தது.

மாநிலத்தின் வருவாய் என்பது இறக்குமதி மற்றும் ஏற்றுமதியால் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், ராய்காட்டைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கொங்கனின் சிறிய மற்றும் பெரிய மன்னர்களையும் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரமுடிந்தது.

மன்னர் சிவாஜி தனது தலைநகரை ராஜ்காட்டில் இருந்து ராய்காட்டுக்கு மாற்றினார். மேலும் அவருடைய ஆளுகைக்குக் கீழ் இருந்த பகுதிகளை வர்த்தகம் மற்றும் வருவாய் அடிப்படையில் மிகவும் நிலையானதாகவும் வசதியாகவும் மாற்றினார்.

ராஜ்காட் கோட்டை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ராஜ்காட்டிலிருந்து ராய்காட்டிற்கு தனது தலைநகரத்தை சிவாஜி மாற்றினார்.

தலைநகராக இல்லாவிட்டாலும், அரசியல் ரீதியாக ராஜ்காட்டின் முக்கியத்துவம் குறையவில்லை. ஜூன் 1689 இல் சத்ரபதி சாம்பாஜி மன்னரின் படுகொலைக்குப் பிறகு முகலாயர்கள் ராஜ்காட்டைக் கைப்பற்றினர். அதன் பிறகு ராஜ்காட்டை மீட்க மராட்டியப் படை தீவிர முயற்சியில் ஈடுபட்டது.

1703 இல் இந்த முயற்சிகள் வெற்றியடைந்தன. ஆனால் ஔரங்கசீப் ஒரு உடன்படிக்கையின் மூலம் ஓராண்டுக்குள் ராஜ்காட்டை மீட்டார். 1704 இல் ராஜ்காட் முகலாயர்களால் கைப்பற்றப்பட்டபோது, ​​அது நவிஷாகாட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளில், அவுரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு மராட்டிய-முகலாய மோதல் முடிவுக்கு வந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜ்காட் பேஷ்வாக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அப்போது, ​​மலைக்கோட்டையின் முக்கியத்துவமும் குறைந்துவிட்டது. இந்தியா சுதந்திரம் பெறும் வரை ராஜ்காட்டின் உரிமை போர் சன்ஸ்தான் என்ற நாட்டிடம் இருந்தது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *