லேப்டாப் விலை ஏற வாய்ப்பு.. இறக்குமதியை தடை செய்த மத்திய அரசு.. ஏன் தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவிய காலகட்டத்தில் வைரஸ் பரவாமல் இருக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்று வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை மேற்கொள்ளும் செயல்முறை துவங்கப்பட்டது. ஆனால் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதற்கு பிறகும் பல நிறுவனங்கள் இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் செயல் முறையை தொடர முடிவு செய்தனர்.

ஒரு சில நிறுவனங்கள் நிரந்தரமாக இத்திட்டத்தை அமல்படுத்திய போது, சில நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடலில் செயல்பட துவங்கின. இந்த ஹைபிரிட் மாடலில் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும். இதன் காரணமாக வீட்டிற்கு ஒரு லேப்டாப் அல்லது பர்சனல் கம்ப்யூட்டர் வாங்குவது அவசியமாக கருதப்பட்டது. ஒரு சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு லேப்டாப்புகளை அனுப்பி வைத்தாலும் சில நிறுவனங்கள் இந்த வசதியை ஏற்படுத்தி தருவதில்லை.

இதனால் பலர் லேப்டாப்புகள் வாங்குவதில் ஆர்வம் காட்ட தொடங்கினர். இந்தியாவில் லேப்டாப், டேப்லெட், பர்சனல் கம்ப்யூட்டர் உற்பத்தி மிக குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை இறக்குமதி செய்வது அதிகமாகியுள்ளது. ஆனால் இது இந்திய பொருளாதாரத்தை பெருமளவு பாதிக்கக்கூடும் என்பதால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசு ஒரு முடிவை எடுத்தது. லேப்டாப்புகள், டேப்லெட்டுகள் மற்றும் பர்சனல் கம்ப்யூட்டர் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்து அறிவிப்பு ஒன்றை வியாழக்கிழமை அன்று வெளியிட்டது. வெளியிட்டது.

“ தடை செய்யப்பட்ட இறக்குமதிகளுக்கு தகுந்த உரிமம் பெற்று இருந்தால் மட்டுமே இறக்குமதி அனுமதிக்கப்படும்,” என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கான இறக்குமதியானது $19.7 பில்லியன் இருந்தது. இதில் லேப்டாப், டேப்லெட்டுகள் மற்றும் பர்சனல் கம்ப்யூட்டர் போன்றவை அடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பெற்ற தாய், தந்தையை வெட்டி கொன்ற கொடூர மகன்.. கேரளாவில் பயங்கரம்.. பின்னணி என்ன?

ஆனால், தற்போது குறிப்பிட்ட வகை லேப்டாப், கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடை, நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று வெளிநாட்டு வர்த்தகத்துக்கான தலைமை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அதுவரை, அதாவது அக்டோபர் 31-ஆம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து உரிமம் இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு திடீரென தனது அறிவிப்பை மாற்றியுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.news18.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *