ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
திருநெல்வேலியில் பெய்த 135% கூடுதல் மழை – டிரோன் காணொளி காட்சிகள்
திருநெல்வேலியில் பெய்த 135% கூடுதல் மழை – டிரோன் காணொளி காட்சிகள்
திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி மற்றும் கன்னியாகுமரி என தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழை பெய்திருக்கிறது.
குமரி மற்றும் இலங்கை கடல் பகுதியில் நிலவும் காற்று கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான அதி கன மழை பெய்து வருகிறது.
இந்தப் பகுதிகளில் ஒரு ஆண்டில் பெய்யும் மழையை விட அதிக மழை 24 மணி நேரத்தில் பெய்துள்ளது.
வானிலை தரவுகளை சேகரிக்கும் தனியார்ஆய்வாளர் பிரதீப் ஜான், “தமிழ்நாட்டில் 1992-ஆம் ஆண்டு 96.5செ.மீ மழை திருநெல்வேலி மாவட்டத்தில் காக்காச்சியில் பெய்தது. அதன் பிறகு, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தான் அதிகமாக மழை பெய்துள்ளது,” என்றார்.
பெருமழை பெய்ததால் திருநெல்வேலியில் ஏற்பட்ட பாதிப்புகளின் டிரோன் காட்சிகள்.

நன்றி
Publisher: பிபிசிதமிழ்