இந்தியா கூட்டணி: உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதி உடன்பாடு, பாஜக ஆதிக்கத்தை தகர்க்க முடியுமா?

இந்தியா கூட்டணி: உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாதி தொகுதி உடன்பாடு, பாஜக ஆதிக்கத்தை தகர்க்க முடியுமா?

'இந்தியா’ கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல் - ராகுல், அகிலேஷ் என்ன கூறினர்?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

ராகுல் காந்தி – அகிலேஷ் யாதவ் (கோப்புப்படம்)

பஞ்சாப், மேற்கு வங்கத்தை தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும் இந்தியா கூட்டணியின் நிலை குறித்து தேசிய அரசியலில் கடந்த 2 நாட்களாக நீடித்த விவாதம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரசும், சமாஜ்வாதியும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி உடன்பாட்டை இறுதி செய்துள்ளன. அதன்படி, காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் எஞ்சிய தொகுதிகளில் சமாஜ்வாதி உ ள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பிற கட்சிகளும் போட்டியிடும்.

உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் நிலை குறித்த சர்ச்சை எழக் காரணமாக அமையும் அளவுக்கு அகிலேஷ் யாதவ் என்ன பேசினார்? அடுத்த இரண்டே நாட்களில் உடன்பாடு எட்டப்பட்டது எப்படி? காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் என்ன பேசினர்? உத்தரபிரதேசத்தில் 10 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் பா.ஜ.க.வை காங்கிரஸ் – சமாஜ்வாதியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியால் தோற்கடிக்க முடியுமா?

அகிலேஷ் பேச்சால் சர்ச்சை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை அமேதியில் இருந்தார். 2019 வரை, ராகுல் காந்தி இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தார்.

அமேதியில் நடந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரடியாக பாஜக மீது குற்றம்சாட்டினார்.

“அவர்கள் (பாஜக) உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் அமேதியில் பணியாற்ற விரும்பவில்லை. பகையை உருவாக்க சதி செய்கிறார்கள்” என கார்கே தெரிவித்தார்.

பாஜகவை விட சமாஜ்வாதி குறித்து கார்கே என்ன சொன்னார் என்பதில் தான் பலரும் ஆர்வம் காட்டினர்.

அமேதியில் நடைபெற்ற இந்த காங்கிரஸ் பேரணிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்து தெரிவித்தார். இது இரு தரப்பினருக்கும் இடையிலான உறவுகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியது.

இதனால், உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி என்ன ஆகும்? என்ற கேள்வியை தேசிய அரசியலில் பெரிதும் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியது.

'இந்தியா’ கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல் - ராகுல், அகிலேஷ் என்ன கூறினர்?

பட மூலாதாரம், ANI

அகிலேஷ் யாதவ் என்ன சொன்னார்?

திங்களன்று அகிலேஷ் யாதவிடம் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி பயணத்தில் பங்கேற்பீர்களா என்று கேட்கப்பட்டது. அகிலேஷ் யாதவ் அல்லது அவரது கட்சியின் பிரதிநிதிகள் நியாய யாத்திரையில் பங்கேற்றால், காங்கிரசுக்கு அமேதி சிறந்த இடமாக இருக்கும்.

உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், நியாய யாத்திரையில் பங்கேற்குமாறு அகிலேஷ் யாதவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைத்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால், அகிலேஷ் யாதவ் , “சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு நிறைவுற்ற பின், நீதி பயணத்தில் சமாஜ்வாதி இணையும்” என தெரிவித்தார்.

’இந்தியா’ கூட்டணி உருவான போது, ​​சமாஜ்வாதி கட்சியைத் தவிர, உத்தர பிரதேசத்தின் ஒரு பகுதியில் செல்வாக்கு பெற்ற ராஷ்ட்ரிய லோக் தளமும் உடன் இருந்தது. 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2022 சட்டமன்றத் தேர்தல்களில் ராஷ்டிரிய லோக்தளம் மற்றும் சமாஜ்வாதி ஒன்றாக இருந்தன. ஆனால், இப்போது ராஷ்டிரிய லோக்தளத்தின் தலைவர் ஜெயந்த் சௌத்ரி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரப் போவதாக அறிவித்துள்ளார்.

2022 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டு சமாஜ்வாதி கட்சியில் இணைந்த சுவாமி பிரசாத் மௌரியா, இப்போது வேறு பாதையில் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். ஓம்பிரகாஷ் ராஜ்பர் நீண்ட காலத்திற்கு முன்பே தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓர் அங்கமாகிவிட்டார்.

'இந்தியா’ கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல் - ராகுல், அகிலேஷ் என்ன கூறினர்?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

மாயாவதி

மாயாவதி தனித்துப் போட்டி

மறுபுறம், ’இந்தியா’ கூட்டணி உருவான பிறகு, இந்த கூட்டணியில் உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியை இணைக்க காங்கிரஸ் முயற்சித்தது. ஆனால், மாயாவதி தனது கட்சி தேர்தலுக்கு முன்பாக எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் இணையாது என்று ஜனவரி மாதமே அறிவித்தார்.

அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, தற்போதைய சூழ்நிலையில், தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதை விட, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது அவ்விரு கட்சிகளுக்கும் சாதகமாக அமையும்.

பாஜக ஆதிக்கத்தை தகர்க்க முடியுமா?

கடந்த 2014-ம் ஆண்டு முதல் உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆதிக்கம் செலுத்தி வருவதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு உத்தர பிரதேசத்தில் செல்வாக்கு உள்ள பகுதிகளில் நல்ல ஆதரவுத் தளத்தைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைப்பதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

உதாரணமாக, மேற்கு உத்தர பிரதேசத்தில் ஜெயந்த் சௌத்ரியின் ராஷ்ட்ரிய லோக்தளம், அனுப்ரியா பட்டேலின் அப்னா தளம் மற்றும் கிழக்கு உத்தர பிரதேசத்தில் ஓம்பிரகாஷ் ராஜ்பரின் சுலேதேவ் பாரதிய சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளை பாஜக இணைத்துக் கொண்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே கூட்டணியை ஆதரிப்பவர்கள் கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களின் முடிவுகளை அவர்களுக்கு ஆதரவாக நினைவுபடுத்துகிறார்கள்.

உ.பி.யில் கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் சமாஜ்வாதி கட்சி தலா ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 2014-ல் இரண்டு இடங்களும், 2019-ல் ஒரே ஒரு இடமும் மட்டுமே கிடைத்தது.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், 2019-ம் ஆண்டு கன்னோஜ் தொகுதியில் தோல்வியடைந்தார். அதேநேரத்தில், ராகுல் காந்தி அமேதியில் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது.

ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் இருந்து மக்களவைக்கு சென்றார். அதேநேரத்தில், முலாயம் சிங் யாதவ் மறைவுக்குப் பிறகு காலியான மெயின்புரி தொகுதியில் இருந்து டிம்பிள் யாதவ் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

'இந்தியா’ கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல் - ராகுல், அகிலேஷ் என்ன கூறினர்?

பட மூலாதாரம், INC

இருப்பினும், கூட்டணி கட்சிகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களில் எதிர்பார்த்ததை விட குறைவான தொகுதிகள் கிடைத்தாலும், சமாஜ்வாதி கட்சி மற்றும் அதன் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் சமீபத்திய அணுகுமுறை, காங்கிரசுக்கு எந்த சலுகையும் கொடுப்பதாக தெரியவில்லை.

திங்களன்று அகிலேஷ் யாதவ், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் காங்கிரசுக்கு தெளிவான சமிக்ஞையை கொடுத்தார். சில மணிநேரங்களில் அவரது கட்சி 11 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது.

அவரது கட்சி ஏற்கனவே 16 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலையும் சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுவிட்டது.

அகிலேஷ் யாதவின் அறிக்கை மற்றும் சமிக்ஞைகளுக்குப் பிறகு, காங்கிரஸ் உயர் தலைவர்கள் நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதைக் காண முடிந்தது.

'இந்தியா’ கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல் - ராகுல், அகிலேஷ் என்ன கூறினர்?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் என்ன சொன்னது?

உ.பி., காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், “நிச்சயமாக இந்த விஷயம் (தொகுதிப் பங்கீடு) மிகவும் சுமூகமான சூழலில் நடக்கிறது. மிக நல்ல சூழலில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அது சாதகமான பலனைத் தரும். நிச்சயமாக ’இந்தியா’ கூட்டணி பலத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும்” என்றார்.

சில மணிநேரம் கழித்து, மல்லிகார்ஜுன கார்கேவும் இந்த விவகாரம் குறித்து பேசினார்.

அவர், “எல்லாம் சரியாகிவிடும். அவர் (அகிலேஷ் யாதவ்) அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். நாங்கள் ஒப்புக்கொண்டோம். எல்லோரும் நலம். தொகுதிப் பங்கீட்டில் எந்த பிரச்னையும் இல்லை” என்றார்.

எல்லாம் சரியாகிவிடும் – அகிலேஷ்

இன்று பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரசுடனான கூட்டணிக்கு சாதகமான பதிலை அளித்துள்ளார். ‘எல்லாம் நன்றாக இருக்கிறது, அது நன்றாகவே முடிகிறது’ என்று அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் இதுவரை இரண்டு முறை பங்கேற்கவில்லை என்பதால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கூட்டணி அமையுமா என்று அகிலேஷ் யாதவிடம் ஊடகங்கள் கேட்டிருந்தன.

இது குறித்து அவர் கூறுகையில், “எல்லாம் நல்லபடியாக நடக்கிறது. ஆம், கூட்டணி அமையும். தொகுதிப் பங்கீட்டில் எந்த சர்ச்சையும் இல்லை. இன்னும் இரண்டு நான்கு நாட்களில் உங்களுக்கு எல்லாம் புரியும்” என்றார்.

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இல்லாமல் தனது கட்சி மூன்று பட்டியல்களை வெளியிட்டிருக்கும் நேரத்தில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் இந்த கருத்தை தெரிவித்துளளார். மூன்றாவது பட்டியலை செவ்வாய்க்கிழமை மாலையில் அவரது கட்சி வெளியிட்டது.

'இந்தியா’ கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல் - ராகுல், அகிலேஷ் என்ன கூறினர்?

பட மூலாதாரம், AVINASH PANDEY / X

படக்குறிப்பு,

உத்தரப்பிரதேச மக்களவை தேர்தலில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.

உத்தரபிரதேசத்தில் தொகுதிப் பங்கீடு

இந்நிலையில் புதன்கிழமையன்று(21.2.2024) மாலையில், அதாவது சிக்கல் எழுந்த இரண்டே நாட்களில் மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் போட்டியிடுவதற்கான காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு முடிவாகிவிட்டதாக அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே அறிவித்துள்ளார்.

அதன்படி, உத்தரபிரதேசத்தில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுவதாகவும், மீதியுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் போட்டியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராஜேந்திர சவுத்ரி, இது இந்தியாவை காப்பாற்றுவதற்கான செய்தி என்றும், அது நாடு முழுவதும் பரவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “உத்தரபிரதேசத்தில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. எங்களது தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியது போல், பாஜக இங்கிருந்ததுதான் 2014ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. அதேபோல் மீண்டும் இந்த மாநிலத்தின் மூலமாகவே ஆட்சியை இழக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூறுவது என்ன?

இந்தியா கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே நிலவும் தொகுதிப் பங்கீடு குறித்த பிரச்னையைப் பற்றிக் கேட்டால், அக்கட்சியினர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சிக்கல்கள் குறித்துப் பேசுகின்றனர்.

சிவசேனா (உத்தவ் பிரிவு) எம்.பி பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 42 கூட்டணி கட்சிகள் இருப்பது குறித்தோ அவர்களுக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சு குறித்தோ யாரும் கேட்பதில்லை” என தெரிவித்தார்.

பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், “பாரத் ஜோடோ நீதி பயணம் கூட்டணியில் இல்லை. இது ‘இந்தியா’ கூட்டணி. நீதி பயணத்தில் பங்கேற்காதத்தால் நாங்கள் பலவீனமான கூட்டணி என்பதை பார்க்க விரும்பவில்லை. நாங்கள் வலுவாக போராடி வருகிறோம். நாங்கள் ஒன்றாக வலுவாக நிற்கிறோம்” என தெரிவித்தார்.

இருப்பினும் தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் முடிவெடுத்தால் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

அவர் கூறும்போது, ​​“தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை, எல்லா கட்சிகளும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்கின்றன. அதேசமயம் விவாதமும் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். அதனால் நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியும்” என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *